ETV Bharat / state

அடுத்தடுத்து 10 வீடுகளில் கொள்ளை; கொள்ளையடித்தது ஐயப்ப பக்தர்களா? - சந்தேகிக்கும் மக்கள்! - thiruvallur crime news

திருவள்ளூர்: கவரப்பேட்டை அருகே பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பூட்டை உடைத்து, 10 சவரன் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

Robbery in 10 houses at same time
author img

By

Published : Nov 21, 2019, 1:04 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே பரணம்பேடு, பண்பாக்கம் ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீடுகளிலிருந்த பீரோவை உடைத்து 10 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், பணம் ஆகியவற்றை அவர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

திருடு போன வீடுகளின் உரிமையாளர்கள் அனைவரும் குடும்பத்தோடு வெளியூர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை வைத்து பார்த்தால் கொள்ளையர்கள் நன்றாக நோட்டமிட்டு பூட்டிய வீடுகளை மட்டும் குறிவைத்து திருடிச் சென்றுள்ளனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஐயப்ப பக்தர்கள் என்று கூறி சிலர் நன்கொடை வசூலித்ததாகவும், அவர்கள் தங்களது கிராமத்தில் உள்ள பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்திருக்கலாம் எனவும் அக்கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட வீடுகள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவரப்பேட்டை காவல் துறையினர், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே பரணம்பேடு, பண்பாக்கம் ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீடுகளிலிருந்த பீரோவை உடைத்து 10 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், பணம் ஆகியவற்றை அவர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

திருடு போன வீடுகளின் உரிமையாளர்கள் அனைவரும் குடும்பத்தோடு வெளியூர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை வைத்து பார்த்தால் கொள்ளையர்கள் நன்றாக நோட்டமிட்டு பூட்டிய வீடுகளை மட்டும் குறிவைத்து திருடிச் சென்றுள்ளனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஐயப்ப பக்தர்கள் என்று கூறி சிலர் நன்கொடை வசூலித்ததாகவும், அவர்கள் தங்களது கிராமத்தில் உள்ள பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்திருக்கலாம் எனவும் அக்கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட வீடுகள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவரப்பேட்டை காவல் துறையினர், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:

Intro:திருவள்ளூர் பொன்னேரி அடுத்த கவரப்பேட்டை அருகே 10க்கும் மேற்பட்ட வீடுகளில் பூட்டை உடைத்து தொடர்ந்து கொள்ளை 10 சவரன் நகை வெள்ளி பொருட்கள் ரொக்கப் பணத்தை அள்ளிச் சென்ற மர்ம நபர்கள் போலீஸ் வலைவீச்சு.


Body:திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே பரணம்பேடு, பண்பாக்கம் ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்த பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். வீடுகளில் இருந்த பீரோவை உடைத்து 10 சவரன் தங்க நகைகள் வெள்ளிப் பொருட்கள் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஐயப்ப பக்தர்கள் எனக் கூறி சிலர் நன்கொடை வசூலித்ததாகவும் அவர்கள் தங்களது கிராமத்தில் உள்ள பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவரப்பேட்டை போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.