ETV Bharat / state

சாலையோர வியாபாரிகள் சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Aug 3, 2019, 3:35 AM IST

திருவள்ளூர்: சாலையோர சிறுகடை வியாபாரிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சாலையோர சிறுகடை வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்வோர், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு அரசு நலவாரியம் அமைத்துத்தர வேண்டும், வேறு பல மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் நலவாரிய பணப்பயன்களைக் கணிசமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாலையோர வியாபாரிகள் சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம்

இதில், 500க்கும் மேற்பட்ட சிஐடியூ மாநில மற்றும் மாவட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு தொழிலாளர் நல வாரிய அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சாலையோர சிறுகடை வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்வோர், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு அரசு நலவாரியம் அமைத்துத்தர வேண்டும், வேறு பல மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் நலவாரிய பணப்பயன்களைக் கணிசமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாலையோர வியாபாரிகள் சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம்

இதில், 500க்கும் மேற்பட்ட சிஐடியூ மாநில மற்றும் மாவட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு தொழிலாளர் நல வாரிய அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

Intro:சாலையோர சிறுகடை வியாபாரிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சார்பாக திருவள்ளூர் மாவட்ட தொழலாளர் நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Body:சாலையோர சிறுகடை வியாபாரிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சார்பாக திருவள்ளூர் மாவட்ட தொழலாளர் நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூரில் உள்ள சாலையோர சிறுகடை வியாபாரிகள் கோரிக்கையை நிறைவேற்ற கோரி பெரியகுப்பம் துளசி திரையரங்கத்தில் இருந்து பேரணியாக சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் வரை பேரணியாக சென்றனர் அதனைத் தொடர்ந்து அலுவலகத்தின் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட சிஐடியு மாநில மற்றும் மாவட்ட தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாலையோர வியாபாரிகள், சுமைப்பணி, வீட்டுவேலை ஆட்டோ உட்பட 15 முறைசாரா நல்லவாரியங்களுக்கு பணப்பயன் முழுமையாக வழங்கிட. உரிய அரசு நிதி ஒதுக்கிட வேண்டும் என்றும் விண்ணப்பித்த 3 மாதத்தில் பணப் பயன்களை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மேலும் வேறு பல மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்திலும் நலவாரிய பணப்பயன்கள் கணிசமாக உயர்த்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். நலவாரிய செயல்பாடுகள் குறித்து அனைத்து மத்திய தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அரசு விவாதித்து ஒரே சீரான நடைமுறையை மாநிலம் முழுவதும் அமுலாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.