ETV Bharat / state

தீ வைத்து கொளுத்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் நாளை மறு வாக்குப்பதிவு - Thiruvallur election booth capturing

திருவள்ளூர்: பாப்பரம்பாக்கம் ஊராட்சித் தொகுதியில் தீ வைத்து கொளுத்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Re voting
Re voting
author img

By

Published : Dec 29, 2019, 1:41 PM IST

கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பாப்பரம்பாக்கம் ஊராட்சி வாக்கு மையத்தில் கடந்த 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றபோது வாக்குப்பதிவு மையம் சூறையாடப்பட்டது. வாக்குப்பதிவு தினத்தன்று காலை 11:30 மணியளவில் பாமக வேட்பாளர்களின் ஆதராவளர்கள் வாக்கு மையத்திற்கு வந்து, முதலில் 83ஆவது பூத்தில் தகராறில் ஈடுபட்டனர். பின்னர், 84ஆவது பூத்தில் நுழைந்தவர்கள் அங்கிருந்த தேர்தல் அலுவலரை காலால் எட்டி உதைத்தனர்.

பின் அங்கிருந்த மேஜைகளை அடித்து நொறுக்கி, வாக்குச் சீட்டுக்கள் உட்பட ஆவணங்களை கிழித்தெறிந்தனர். பின் அங்கு பொதுமக்கள் வைத்திருந்த வாக்குப்பெட்டியை எடுத்து, வெளியே எடுத்துச் சென்றவர்கள் அதிலிருந்த பதிவான வாக்குச்சீட்டுகளை பள்ளி வளாகத்தில் தீயிட்டு கொளுத்தினர்.

இதன் காரணமாக அந்தப்பள்ளியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் வித்யா மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் உள்ளிட்டோர் வாக்குப்பதிவு மையத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர்.

திருவள்ளூர் வாக்குப்பதிவு மையம்

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண். 83 மற்றும் 84 ஆகியவற்றில் நாளை (30.12.2019 அன்று) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை வழிமறித்த சிறுத்தை - வீடியோ

கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பாப்பரம்பாக்கம் ஊராட்சி வாக்கு மையத்தில் கடந்த 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றபோது வாக்குப்பதிவு மையம் சூறையாடப்பட்டது. வாக்குப்பதிவு தினத்தன்று காலை 11:30 மணியளவில் பாமக வேட்பாளர்களின் ஆதராவளர்கள் வாக்கு மையத்திற்கு வந்து, முதலில் 83ஆவது பூத்தில் தகராறில் ஈடுபட்டனர். பின்னர், 84ஆவது பூத்தில் நுழைந்தவர்கள் அங்கிருந்த தேர்தல் அலுவலரை காலால் எட்டி உதைத்தனர்.

பின் அங்கிருந்த மேஜைகளை அடித்து நொறுக்கி, வாக்குச் சீட்டுக்கள் உட்பட ஆவணங்களை கிழித்தெறிந்தனர். பின் அங்கு பொதுமக்கள் வைத்திருந்த வாக்குப்பெட்டியை எடுத்து, வெளியே எடுத்துச் சென்றவர்கள் அதிலிருந்த பதிவான வாக்குச்சீட்டுகளை பள்ளி வளாகத்தில் தீயிட்டு கொளுத்தினர்.

இதன் காரணமாக அந்தப்பள்ளியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் வித்யா மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் உள்ளிட்டோர் வாக்குப்பதிவு மையத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர்.

திருவள்ளூர் வாக்குப்பதிவு மையம்

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண். 83 மற்றும் 84 ஆகியவற்றில் நாளை (30.12.2019 அன்று) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை வழிமறித்த சிறுத்தை - வீடியோ

Intro:திருவள்ளூர் மாவட்டம் தீ வைத்து கொளுத்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் மீண்டும் வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறதுBody:
திருவள்ளூர் மாவட்டம் தீ வைத்து கொளுத்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் மீண்டும் வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது


கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது பாப்பரம்பாக்கம் ஊராட்சி. வாக்கு மையத்தில் 27-12-2019 காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இந்த ஓட்டுப்பதிவு இப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள 83, மற்றும்84, மற்றும்85 ஆகிய பூத்களில் நேற்று துவங்கியது. நேற்று காலை 11:30 மணியளவில் பா.ம.க., வேட்பாளர்களின் ஆதராவளர்கள் ஓட்டு மையத்திற்கு வந்து முதலில் 83 பூத்தில் ஓட்டுப்பதிவில் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து, 84 பூத்தில் நுழைந்தவர்கள் அங்கிருந்த தேர்தல் அலுவலரை காலால் எட்டி உதைத்தனர். பின் அங்கிருந்த டேபிள்களை அடித்து நொறுக்கி, ஓட்டுச் சீட்டுக்கள் உட்பட ஆவணங்களை கிழித்தெறிந்தனர். பின் அங்கி பொதுமக்கள் வைத்திருந்த ஓட்டுப்பெட்டியை எடுத்து வெளியே எடுத்துச் சென்றவர்கள் அதிலிருந்த பதிவான ஓட்டுச்சீட்டுகளை பள்ளி வளாகத்தில் தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து அங்கு ஓட்டுப்போட வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் அந்தப்பள்ளியில் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. தகவலறிந்த திருவள்ளூர் ஆர்.டி.ஓ., வித்யா மற்றும் மாவட்ட எஸ்.பி., அரவிந்தன் தலைமையில் டி.எஸ்.பி., கங்காதரன் மற்றும் போலீசார் ஓட்டு மையத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். பின், அங்கு ஆய்வு செய்து பள்ளி வளாகத்தில் தீயிட்டு கொளுத்தப்படடு சாம்பலான பதிவான ஓட்டுச்சீட்டுக்களின் சாம்பலை கைப்பற்றினர். பின் அங்கு பள்ளி காம்பவுண்டு சுவர் அருகே கிடந்த உடைத்தெறியப்பட்ட ஓட்டுப்பெட்டியையும் கைப்பற்றினர். இதையடுத்து அந்தப்பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின், அந்த பள்ளி வளாகத்தில் 83, 84 ஆகிய பூத்களில் தேர்தல் நிறுத்தப்பட்டு, 85 பூத்தில் மட்டும் தேர்தல் நடைபெறுவதாக ஆர்.டி.ஓ., வித்யா அறிவித்தார்.
இதனையறிந்த அப்பகுதி வாக்காளர்கள் மற்றும் பிற வேட்பாளர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு தேர்தலை நிறுத்த வேண்டும் என கூறி பள்ளி நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின் மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஆர்.டி.ஓ., வித்யா சென்று 85ம் எண் பூத் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே, அங்கு மட்டும் தேர்தல் நடைபெறும். வாக்காளர்கள் வந்து வாக்களிக்கலாம் என கூறினார். ஆனாலும் வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கலையாததால், டி.எஸ்.பி., கங்காதரன் மறியலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் பாப்பரம்பக்கம் ஊராட்சி
வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண். 83 மற்றும் 84 ஆகியவற்றில் 30.12.2019 அன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.