ETV Bharat / state

போராட்டத்தை கைவிட்டு ஒருவழியாக வாக்களித்து சத்திரை கிராம மக்கள் - ambethkar nagar people protest

திருவள்ளூர்: போராட்டத்தில் ஈடுபட்ட சத்திரை கிராம மக்களுடன் தேர்தல் அலுவலர்கள் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வாக்களிக்கச் சென்றனர்.

சத்திரை கிராம மக்கள்
author img

By

Published : Apr 18, 2019, 8:38 PM IST

திருவள்ளூர் மாவட்டம் சத்திரை கிராமத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, ஆண், பெண் உட்பட 252 வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா, சாலை, குடிநீர் வசதி உட்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் கஷ்டமான சூழலில் வாழ்ந்து வந்துள்ளனர். இது குறித்து அரசு அலுவலர்களிடம் மனு அளித்தும் எந்தப் பலனும் கிட்டவில்லை. இந்நிலையில், அப்பகுதி மக்களிடம் அரசியல் தலைவர்கள் வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர்.

தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கோரிக்கைகள் எதுவும் கிடைக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருவள்ளூர் தனி தொகுதி மக்களவை தேர்தலை புறக்கணிக்கும் வகையில் வாக்களிக்க மறுத்து தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, 3 மணி வரை நடைபெற்ற பொதுமக்களின் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், அம்பேத்கர் நகரில் வசிக்கும் மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

சத்திரை கிராம மக்கள்

திருவள்ளூர் மாவட்டம் சத்திரை கிராமத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, ஆண், பெண் உட்பட 252 வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா, சாலை, குடிநீர் வசதி உட்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் கஷ்டமான சூழலில் வாழ்ந்து வந்துள்ளனர். இது குறித்து அரசு அலுவலர்களிடம் மனு அளித்தும் எந்தப் பலனும் கிட்டவில்லை. இந்நிலையில், அப்பகுதி மக்களிடம் அரசியல் தலைவர்கள் வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர்.

தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கோரிக்கைகள் எதுவும் கிடைக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருவள்ளூர் தனி தொகுதி மக்களவை தேர்தலை புறக்கணிக்கும் வகையில் வாக்களிக்க மறுத்து தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, 3 மணி வரை நடைபெற்ற பொதுமக்களின் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், அம்பேத்கர் நகரில் வசிக்கும் மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

சத்திரை கிராம மக்கள்
 18.04.19.



திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ் பாபு


திருவள்ளுர் அருகே அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தராததால் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு.

திருவள்ளுர் மாவட்டம். கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட சத்திரை கிராமம் அம்பேத்கர் நகரில் சுமார் 300க்கும் மேற்ப்பட்டவர்கள் வசித்து வருகின்றனர் இதில் ஆண் பெண் உட்பட 252 வாக்காளர்கள் உள்ளனர். இன்நிலையில் இப்பகுதியில். இதுவரை யாருக்கும் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் சாலை குடிநீர் வசதி உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருவள்ளுர் பாராளுமன்ற தனி தொகுதி தேர்தலை புறக்கணித்து தங்கள் கிராமத்தில் பந்தல் அமைத்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர் இதனால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Visual send in ftp...

TN_TRL_01_18_PUBLIC_ ELECTION _BOYCOTT _VISUAL_ SCRIPT_7204867
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.