ETV Bharat / state

ஏரிக்கரையை உடைத்த 3 பேரை ஜாமீனில் விட்டதால் 'தீப்பந்த ஆர்ப்பாட்டம்' - #Thiruvallur Fire Ball protest

திருவள்ளூர்: ஜேசிபி மூலம் ஏரிக்கரையை உடைத்த  வழக்கில், கைது செய்யப்பட்ட ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேரை ஜாமீனில் விடுவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏரியில் இறங்கி தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

broke thiruvallur
author img

By

Published : Sep 10, 2019, 1:48 PM IST

திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூர் கிராமத்தில் வாகன உதிரி பாகங்கள் உற்பத்திச் செய்யும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு அருகில் 32 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியைச் சார்ந்து 600 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

இந்நிலையில், தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருள்கள் எடுத்துச் செல்ல ஏரியின் கரையை ஜேசிபி மூலம் உடைத்துள்ளது தொழிற்சாலை நிர்வாகம். இதனையறிந்த மேல்நல்லாத்தூர் கிராம மக்கள் ஜேசிபி வாகனத்தை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன் தவைமையிலான காவல்துறையினர் கரையை உடைத்த ஜேசிபி ஓட்டுநர், தொழிற்சாலையைச் சேர்ந்த இரண்டு பேரை கைது செய்தனர்.

ஏரிக்கரையை உடைத்த 3 பேரை ஜாமீனில் விட்டதால் 'தீப்பந்த ஆர்ப்பாட்டம்'

இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் சொந்த ஜாமீன் அளித்து, சிறைப்பிடிக்கப்பட்ட ஜேசிபி வாகனத்தையும் விடிவித்துள்ளது காவல்துறை, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்நல்லாத்தூர், பட்டறை கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் தீப்பந்தம் ஏந்தியவாறு ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அவர்கள் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிக்கரையை உடைத்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கரையை உடைக்க பயன்படுத்திய ஜேசிபி வாகனத்தை மீண்டும் பறிமுதல் செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது.

திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூர் கிராமத்தில் வாகன உதிரி பாகங்கள் உற்பத்திச் செய்யும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு அருகில் 32 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியைச் சார்ந்து 600 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

இந்நிலையில், தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருள்கள் எடுத்துச் செல்ல ஏரியின் கரையை ஜேசிபி மூலம் உடைத்துள்ளது தொழிற்சாலை நிர்வாகம். இதனையறிந்த மேல்நல்லாத்தூர் கிராம மக்கள் ஜேசிபி வாகனத்தை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன் தவைமையிலான காவல்துறையினர் கரையை உடைத்த ஜேசிபி ஓட்டுநர், தொழிற்சாலையைச் சேர்ந்த இரண்டு பேரை கைது செய்தனர்.

ஏரிக்கரையை உடைத்த 3 பேரை ஜாமீனில் விட்டதால் 'தீப்பந்த ஆர்ப்பாட்டம்'

இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் சொந்த ஜாமீன் அளித்து, சிறைப்பிடிக்கப்பட்ட ஜேசிபி வாகனத்தையும் விடிவித்துள்ளது காவல்துறை, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்நல்லாத்தூர், பட்டறை கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் தீப்பந்தம் ஏந்தியவாறு ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அவர்கள் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிக்கரையை உடைத்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கரையை உடைக்க பயன்படுத்திய ஜேசிபி வாகனத்தை மீண்டும் பறிமுதல் செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது.

Intro:
திருவள்ளூர் அருகே ஜே.சி.பி வாகனம் மூலம் ஏரிக்கரையை உடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறைபிடித்து ஒப்படைத்த ஜேசிபியை விடுவித்ததுடன் கைது செய்த 3 பேரை சொந்த ஜாமினில் விடுலித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்டோர் ஏரியில் தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் :

Body:
திருவள்ளூர் அருகே ஜே.சி.பி வாகனம் மூலம் ஏரிக்கரையை உடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறைபிடித்து ஒப்படைத்த ஜேசிபியை விடுவித்ததுடன் கைது செய்த 3 பேரை சொந்த ஜாமினில் விடுலித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்டோர் ஏரியில் தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூர் கிராமத்தில் தனியார் வாகன உதிரி பாகங்கள் தயார் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு அருகில் பட்டரை கிராமத்திற்கான ஏரி 32 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியை நம்பி 600 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பயன்பெற்று வருகின்றது. தற்போதைய நிலையில் கடந்த சில நாள்களாக பெய்த மழையால் நீர் தேங்கியும் வருகிறது. இந்த ஆலைக்கு தேவையான உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள்கள் பட்டரை கிராமப்புறம் வழியாக எடுத்துச் செல்வதால் பொது மக்களுக்கு இடையூறாக இருப்பதால் ஜே.சி.பி வாகனம் ஏரிக்கரையை உடைத்து மணல் அள்ளி ஏரி வழியாக பாதை அமைத்து வாகனம் செல்வதற்கு ஏற்பாடு செய்தனர். இதையறிந்த மேல்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜே.சி.பி வாகனத்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல் துணைக்கண்காணிப்பாளர் கங்காதரன், வட்டாட்சியர் எம்.பாண்டியராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஜேசிபி மூலம் கரையை உடைத்ததால் ஜேசிபி ஓட்டுநர் மற்றும் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் காவல்துறையினர் ஜே சி பி ஐ விடுவித்தது உடன் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்நல்லாத்தூர் மற்றும் பட்டறை கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கையில் தீப்பந்தம் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை போராட்டம் நீடித்ததால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் ‌. குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிக்கரையை உடைத்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கரையை அடைக்க பயன்படுத்தி ஜேசிபி இயந்திரத்தை மீண்டும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் போராட்டம் தொடரும் எனவும் கிராம மக்கள் எச்சரித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.