ETV Bharat / state

வெள்ள நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - அரசிடம் நிவாரணத்தை எதிர்பார்க்கும் விவசாயிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையினால் வயல்வெளிகளில் இடுப்பளவு நீர் தேங்கி, நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

author img

By

Published : Nov 12, 2021, 8:11 PM IST

Paddy crops submerged in flood water
Paddy crops submerged in flood water

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், தோமூர் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் நெற்பயிர் நடவுசெய்து, ஒரு மாத காலமாக பாதுகாத்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கன மழையினால், இடுப்புக்கு மேல் நெற்பயிரில் தேங்கி நிற்கும் மழை நீரினால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சுமார் 25 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கிய நிலையில் ரூ.7 லட்சம் வரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

பயிர்கள் அழுகும் நிலை

இடுப்பளவு வெள்ள நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
மேலும் மழை நீரில் மூழ்கிய நெற்பயிரை விளைவித்த விவசாயி இதுகுறித்து கூறுகையில், 'சுமார் ஒரு மாதகாலமாக நிலத்தை உழுது, நாற்று நட்டு வைத்து, அதனைப் பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தோம்.

எதிர்பாராமல் பெய்த கனமழையினால் இடுப்பு அளவிற்கு மழை நீர் தேங்கி நெற்பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி உள்ளன.

water
இடுப்பளவு நீரில் மூழ்கிக் கிடக்கும் நெற்பயிர்கள்

இதனால் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிட்ட நெற்பயிர்கள் முற்றிலுமாக அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: மழைப்பாதிப்பு: பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிதியை அரசு உடனடியாக வழங்க வேண்டும் - சசிகலா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், தோமூர் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் நெற்பயிர் நடவுசெய்து, ஒரு மாத காலமாக பாதுகாத்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கன மழையினால், இடுப்புக்கு மேல் நெற்பயிரில் தேங்கி நிற்கும் மழை நீரினால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சுமார் 25 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கிய நிலையில் ரூ.7 லட்சம் வரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

பயிர்கள் அழுகும் நிலை

இடுப்பளவு வெள்ள நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
மேலும் மழை நீரில் மூழ்கிய நெற்பயிரை விளைவித்த விவசாயி இதுகுறித்து கூறுகையில், 'சுமார் ஒரு மாதகாலமாக நிலத்தை உழுது, நாற்று நட்டு வைத்து, அதனைப் பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தோம்.

எதிர்பாராமல் பெய்த கனமழையினால் இடுப்பு அளவிற்கு மழை நீர் தேங்கி நெற்பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி உள்ளன.

water
இடுப்பளவு நீரில் மூழ்கிக் கிடக்கும் நெற்பயிர்கள்

இதனால் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிட்ட நெற்பயிர்கள் முற்றிலுமாக அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: மழைப்பாதிப்பு: பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிதியை அரசு உடனடியாக வழங்க வேண்டும் - சசிகலா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.