ETV Bharat / state

கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் - Thiruvallur Road Protest

திருவள்ளூர்: பஜார் வீதி அருகே பல மாதங்களாகத் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Thiruvallur Road Protest
Thiruvallur Road Protest
author img

By

Published : Jan 4, 2020, 9:33 AM IST

திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான பஜார் வீதி அருகே மசூதி தெரு உள்ளது. இந்தத் தெருவில் 50க்கும் மேற்பட்ட கடைகள், குடியிருப்புகள் ஆகியவை உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் முறையான கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல், சுகாதாரச் சீர்கேட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனைச் சீர்செய்யக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, நேற்று திருவள்ளூர் மசூதி தெரு அருகே 50க்கும் மேற்பட்ட மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்தது நகர காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையிலான காவலர்கள் அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்பின், காவல் துறையினர் நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இன்னும் ஓரிரு நாள்களில் சீரமைப்பதாக நகராட்சி அலுவலர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். அப்போது, ஜாமியா மசூதி ஹஜ்ரத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இங்கு பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காததால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

இதையும் படிங்க:

சாலை வசதி அமைக்கக் கோரி காரமடை தேர்தல் புறக்கணிப்பு!

திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான பஜார் வீதி அருகே மசூதி தெரு உள்ளது. இந்தத் தெருவில் 50க்கும் மேற்பட்ட கடைகள், குடியிருப்புகள் ஆகியவை உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் முறையான கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல், சுகாதாரச் சீர்கேட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனைச் சீர்செய்யக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, நேற்று திருவள்ளூர் மசூதி தெரு அருகே 50க்கும் மேற்பட்ட மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்தது நகர காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையிலான காவலர்கள் அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்பின், காவல் துறையினர் நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இன்னும் ஓரிரு நாள்களில் சீரமைப்பதாக நகராட்சி அலுவலர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். அப்போது, ஜாமியா மசூதி ஹஜ்ரத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இங்கு பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காததால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

இதையும் படிங்க:

சாலை வசதி அமைக்கக் கோரி காரமடை தேர்தல் புறக்கணிப்பு!

Intro:பல மாதங்களாக மசூதி சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரி இஸ்லாமியர்கள் திருவள்ளூர் பஜார் வீதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Body:பல மாதங்களாக மசூதி சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரி இஸ்லாமியர்கள் திருவள்ளூர் பஜார் வீதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மையப்பகுதியான பஜார் வீதி அருகே மசூதி தெரு உள்ளது இந்த தெருவில் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன மேலும் குடியிருப்புகளும் உள்ளன.
இந்த நிலையில் மசூதி தெருவில் கால்வாய் முறையாக இல்லாததால் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல வழி இல்லை இதனால் மழைநீர் சாலையில் தேங்குவதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது இதை சீர் செய்ய கோரி பலமுறை அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து இன்று திருவள்ளூர் மசூதி தெரு அருகே இஸ்லாமியர்கள் 50க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர் இன்னும் ஓரிரு தினங்களில் இந்த சீர்கேட்டை சீர் அமைப்பதாக நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்த பின் அனைவரும் கலைந்து சென்றனர் இதுகுறித்து ஜாமியா மசூதி ஹஜ்ரத் கூறும்போது இங்கு பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காததால் என்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் இதிலும் நடவடிக்கை இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.