ETV Bharat / state

ஒரே இரவில் அடுத்தடுத்த 10 கடைகளில் கொள்ளை - பீதியில் வியாபாரிகள்

author img

By

Published : Nov 26, 2019, 10:30 AM IST

திருவள்ளூர்: திருத்தணி பேருந்து நிலையம் அருகே அடுத்தடுத்துள்ள பத்து கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி வியாபாரிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பேருந்து நிலையம் அருகே அரக்கோணம் சாலையில் நகை, செல்போன், வீட்டு அலங்காரப் பொருள்கள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. நாள் முழுவதும் பரபரப்பாக காணப்படும் இச்சாலையில் காவல் துறையினர் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இருப்பினும், நேற்று நள்ளிரவு கொள்ளையர்கள் அடுத்தடுத்து உள்ள பத்து கடைகளின் பூட்டை உடைத்து, அதில் மூன்று கடைகளில் ரூ.1.50 ஆயிரம் பணம், விலை உயர்ந்த செல்போன்கள், விலை உயர்ந்த பொருள்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

திருத்தணி பேருந்து நிலையம்

கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள கடைகளைத் தவிர்த்து, மற்ற கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். திருத்தணி நகரில் சமீபகாலமாக இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிகரித்து வந்த நிலையில், ஒரே இரவில் பத்து கடைகளில் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதி வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பேருந்து நிலையம் அருகே அரக்கோணம் சாலையில் நகை, செல்போன், வீட்டு அலங்காரப் பொருள்கள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. நாள் முழுவதும் பரபரப்பாக காணப்படும் இச்சாலையில் காவல் துறையினர் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இருப்பினும், நேற்று நள்ளிரவு கொள்ளையர்கள் அடுத்தடுத்து உள்ள பத்து கடைகளின் பூட்டை உடைத்து, அதில் மூன்று கடைகளில் ரூ.1.50 ஆயிரம் பணம், விலை உயர்ந்த செல்போன்கள், விலை உயர்ந்த பொருள்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

திருத்தணி பேருந்து நிலையம்

கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள கடைகளைத் தவிர்த்து, மற்ற கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். திருத்தணி நகரில் சமீபகாலமாக இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிகரித்து வந்த நிலையில், ஒரே இரவில் பத்து கடைகளில் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதி வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை!

Intro:திருத்தணி பேருந்து நிலையம் அருகில் ஒரே இரவில் அடுத்தடுத்த 10 கடைகளின் பூட்டை உடைத்து பணம்,பொருட்கள் கொள்ளை. வியாபாரிகள் அச்சம்.


Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பேருந்து நிலையம் அருகில் கண்காணிப்பு கேமராக்கள் நிறைந்த அரக்கோணம் சாலையில் நகைக்கடை,மல்லிகை,செல்போன்,வீட்டு அலங்கார பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளது.காலை முதல் இரவு வரை தொடர்ந்து பரபரப்பாக காணப்படும் இச்சாலையில் காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் கண்காணிப்பு கேமராக்கள் காவல்துறையினருக்கு சவால் விடும் வகையில நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் அடுத்தடுத்த 10 கடைகளின் பூட்டை உடைத்துள்ளனர். இக் கொள்ளைச் சம்பவத்தில் ரத்தப் பரிசோதனை மையம் ,செல்போன் கடை,சிகை அலங்காரம் கடைசி ஆகிய மூன்று கடைகளில் ரூபாய் 1.50 லட்சத்து பணம் விலை உயர்ந்த செல்போன்களைத் திருடப்பட்டுள்ளது மேலும் ஏழு கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ள சம்பவம் பரபரப்பை வியாபாரிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது கடைகள் தவிர்த்து கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. திருத்தணி நகரில் சமீபகாலமாக இருசக்கர வாகனங்கள் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஒரே இரவில் பத்து கடைகளின் பூட்டை உடைத்து திருட்டுச் சம்பவம் வியாபாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.காவல்துறையினருக்கு சவால் விடும் வகையில் நடைபெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.