ETV Bharat / state

வேகமாக பரவிவரும் மர்மக் காய்ச்சல்: 35 பேர் பாதிப்பு

author img

By

Published : Oct 11, 2019, 10:57 AM IST

திருவள்ளூர்: 35 பேர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

dengue fever attack

கடந்த வாரம் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் தேங்கியுள்ளதால், தொற்று நோய்கள் பரவிவருகின்றன. இதனால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

35க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருகின்றனர். மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில், 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகள் அதிகரித்து வருவதால் திருத்தணி நகராட்சி சார்பில் கூடுதலாக 50 கொசு ஒழிப்பு பணியாளர்களும் துப்புரவுப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு, தூய்மைப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: '2 பாம்புகள், 16 மரப்பல்லிகள், உடும்புகள்' - பயணி கூடையைத் திறந்து அதிர்ந்த சுங்கத்துறையினர்!

கடந்த வாரம் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் தேங்கியுள்ளதால், தொற்று நோய்கள் பரவிவருகின்றன. இதனால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

35க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருகின்றனர். மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில், 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகள் அதிகரித்து வருவதால் திருத்தணி நகராட்சி சார்பில் கூடுதலாக 50 கொசு ஒழிப்பு பணியாளர்களும் துப்புரவுப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு, தூய்மைப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: '2 பாம்புகள், 16 மரப்பல்லிகள், உடும்புகள்' - பயணி கூடையைத் திறந்து அதிர்ந்த சுங்கத்துறையினர்!

Intro:35 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை.


Body:திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த மழைக்கு பல்வேறு பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கியுள்ளதால் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய் பரவி வருகின்றது. இதனால் சிறுவர் முதல் முதியவர் வரை காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு, திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த ஒரு வாரமாக காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் அதிகரித்து வருவதால் திருத்தணி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களில் 35க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகள் அதிகரித்து வருவதால் திருத்தணி நகராட்சி சார்பில் கூடுதலாக 50 கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தூய்மைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.