ETV Bharat / state

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

author img

By

Published : May 10, 2019, 2:41 PM IST

திருவள்ளூர்: புழல், சோழவரம் ஏரிகள் தற்போது வறண்டு காணப்படுவதால், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

chennai-water-problem

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது அக்னி நட்சத்திரம் வெயில் ஆரம்பமாகியுள்ளது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த வருடம் பருவமழை சரிவர பெய்யாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும் புழல், சோழவரம் ஆகிய ஏரிகள் மிகவும் வறண்டு காணப்படுகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு மூன்றாயிரத்து 300 மில்லியன் கன அடி. இதில் 106 மில்லியன் கன அடி நீர் தற்போது உள்ளது.மேலும், 85 கனஅடி நீர் சென்னை குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது.

இதேபோல் சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளவு ஆயிரத்து 81 மில்லியன் கன அடி ஆகும். இதில் தற்போது 9 மில்லியன் கன அடி நீ ர் மட்டுமே உள்ளது. அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு நீர் இருப்பு மேலும் குறைவய வாய்ப்புள்ளதால், இன்னும் ஒரு சில நாட்களில் நீர் முற்றிலுமாக வறண்டு போகும் சூழ்நிலை உள்ளது. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஏரிகளை சரிவர துார்வாராததால் இந்நிலை உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது அக்னி நட்சத்திரம் வெயில் ஆரம்பமாகியுள்ளது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த வருடம் பருவமழை சரிவர பெய்யாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும் புழல், சோழவரம் ஆகிய ஏரிகள் மிகவும் வறண்டு காணப்படுகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு மூன்றாயிரத்து 300 மில்லியன் கன அடி. இதில் 106 மில்லியன் கன அடி நீர் தற்போது உள்ளது.மேலும், 85 கனஅடி நீர் சென்னை குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது.

இதேபோல் சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளவு ஆயிரத்து 81 மில்லியன் கன அடி ஆகும். இதில் தற்போது 9 மில்லியன் கன அடி நீ ர் மட்டுமே உள்ளது. அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு நீர் இருப்பு மேலும் குறைவய வாய்ப்புள்ளதால், இன்னும் ஒரு சில நாட்களில் நீர் முற்றிலுமாக வறண்டு போகும் சூழ்நிலை உள்ளது. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஏரிகளை சரிவர துார்வாராததால் இந்நிலை உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Intro:சென்னை குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் மற்றும் சோழவரம் ஏரி வறண்டு காணப்படுவதால் சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.


Body:சென்னை மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் செம்பரம்பாக்கம்,புழல் சோழவரம், பூண்டி ஆகிய முக்கிய எரிகளாக விளங்குகிறது. இதில் இந்த வருடம் பருவமழை சரிவர பெய்யாததால் புழல் மற்றும் சோழவரம் ஆகிய ஏரிகள் மிகவும் வறண்டு காணப்படுகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி இதில் தற்போது 106 மில்லியன் கனஅடி உள்ளது. மேலும் 85 கண்ணாடி சென்னை குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது. இதேபோல் சோழவரம் ஏரி மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி இதில் 9 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் துவங்கி இருக்கும் நிலையில் மேலும் நீர் இருப்பு குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் ஒரு சில நாட்களிலே தண்ணீர் முற்றிலும் வறண்டு போகும் சூழ்நிலை உள்ளதால் சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏரிகளை சரிவர தூர்வாராததாலும் கால்வாய்களை சீர்படுத்தாதாலும் இந்நிலை உருவாகியுள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


Conclusion:ஏரிகளை சரிவர தூர்வாராததாலும் கால்வாய்களை சீர்படுத்தாதாலும் இந்நிலை உருவாகியுள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.