ETV Bharat / state

கார் மோதியதில் சிறுவன் பலி: காரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!

author img

By

Published : Apr 28, 2021, 6:15 PM IST

திருவள்ளூர்: மாங்காடு அருகே கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டவர் பின்புறமாக காரை இயக்கியபோது, 11 வயது சிறுவன் காருக்கு அடியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Car
Car

திருவள்ளூர் மாவட்டம், போரூர் அடுத்த மதனந்தபுரம், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நிரோஷா (34). இவரது மகன் விஜய்(11). இவர் அதே பகுதியில் உள்ள காலி மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்தார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவர் தனது உறவினர் பெண் மோனிகா (26) என்பவருக்கு காலி மைதானத்தில் கார் ஓட்ட பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார். இந்த பயிற்சியில் காரை ரிவர்ஸ் எடுக்க சொல்லி கொடுத்தப்போது காரானது விளையாடிய சிறுவன் விஜய் மீது மோதியது.

இதில் சிறுவனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சிகிச்சை அளிப்பதற்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயை அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து மாங்காடு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்துபோன சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

பின்பு விபத்துக்கு காரணமான அஜய், மோனிகா ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த காரை அடித்து நொறுக்கினர். மேலும் விபத்து ஏற்படுத்திய மோனிகாவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர் மாவட்டம், போரூர் அடுத்த மதனந்தபுரம், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நிரோஷா (34). இவரது மகன் விஜய்(11). இவர் அதே பகுதியில் உள்ள காலி மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்தார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவர் தனது உறவினர் பெண் மோனிகா (26) என்பவருக்கு காலி மைதானத்தில் கார் ஓட்ட பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார். இந்த பயிற்சியில் காரை ரிவர்ஸ் எடுக்க சொல்லி கொடுத்தப்போது காரானது விளையாடிய சிறுவன் விஜய் மீது மோதியது.

இதில் சிறுவனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சிகிச்சை அளிப்பதற்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயை அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து மாங்காடு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்துபோன சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

பின்பு விபத்துக்கு காரணமான அஜய், மோனிகா ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த காரை அடித்து நொறுக்கினர். மேலும் விபத்து ஏற்படுத்திய மோனிகாவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.