ETV Bharat / state

விவசாயி வீட்டில் கொள்ளை: அடையாளம் தெரியாத நபர்களுக்கு வலைவீச்சு!

author img

By

Published : Aug 3, 2019, 3:33 AM IST

திருவள்ளூர்: பொன்னேரியில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 3.50 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்து சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து பல லட்சம் கொள்ளை: மர்ம நபருக்கு வலைவீச்சு!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பொன்னியம்மா நகரைச் சேர்ந்தவர் விவசாயி முனி கண்ணையா. இவர் வியாழக்கிழமை காலை ஆந்திராவில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ரூ.3லட்சத்து 50ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கொள்ளையடிக்கப்பட்ட வீட்டை சோதனை செய்யும் காவல்துறையினர்

பின்னர் இதுகுறித்து முனி கண்ணையா கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறையினர் சோதனை செய்து கிடைத்த தடயங்களை கொண்டு விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பொன்னியம்மா நகரைச் சேர்ந்தவர் விவசாயி முனி கண்ணையா. இவர் வியாழக்கிழமை காலை ஆந்திராவில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ரூ.3லட்சத்து 50ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கொள்ளையடிக்கப்பட்ட வீட்டை சோதனை செய்யும் காவல்துறையினர்

பின்னர் இதுகுறித்து முனி கண்ணையா கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறையினர் சோதனை செய்து கிடைத்த தடயங்களை கொண்டு விசாரித்து வருகின்றனர்.

Intro:பொன்னேரியில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 3.50 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை.கைவரிசை காட்டிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.


Body:திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் விவசாயியின் வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்னியம்மா நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி முனி கண்ணையா ஆந்திரா மாநிலம் தடாவில் உள்ள தமது தோட்டத்திற்கு சென்று உள்ளார் அவரது மனைவி புஷ்பா மாலை வீட்டை பூட்டிக்கொண்டு தனது சொந்தக்காரர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்பு தோட்டத்தில் வேலை முடித்துவிட்டு ஆந்திராவில் இருந்து வீடு திரும்பிய போது கதவு திறந்து கிடப்பதை கண்டு சந்தேகம் அடைந்த முனி கண்ணையா உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 3.50 லட்சம் ரொக்கப் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பொன்னேரி காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அத்தி வரதர் திருவிழா பாதுகாப்பிற்காக போலீசார் சென்று விட்டதால் முறையான ரோந்து பணியில் போலீசார் ஈடுபடாதது இதுபோன்ற கொலைச் சம்பவத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. வீட்டின் பூட்டை உடைத்து 3.50 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குடியிருப்புவாசிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.