ETV Bharat / state

ரயில் தண்டவாளத்தில் இளைஞர் சடலம் மீட்பு

author img

By

Published : Dec 8, 2020, 10:22 PM IST

திருநெல்வேலி: நாங்குநேரி ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ரயில் தண்டவாளத்தில் இளைஞர் சடலம் மீட்பு
ரயில் தண்டவாளத்தில் இளைஞர் சடலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ரயில் நிலையம் அருகே இன்று (டிச.8) இரவு தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் கிடப்பதாக நாங்குநேரி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் ரயில்வே அலுவலர்களிடம் விசாரித்தனர்.

அதற்கு அவர்கள் இளைஞர் உயிரிழந்த நேரத்தில் கன்னியாகுமரி விரைவு ரயில் சென்றதாக தெரிவித்தனர். தொடர்ந்து இளைஞரின் அடையாள அட்டையை பார்த்ததில், அவர் நாங்குநேரி அடுத்த களக்காடு நபித்தோப்பு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஸ்ரீதர்(19) என்பதும் பெயிண்டிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

பின்னர் இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளைஞரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர்.

தற்போது இளைஞர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்துவிட்டு தண்டவாளத்தில் போட்டுச் சென்றார்களா? இல்லை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா? போன்ற கோணங்களில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: பொன்னமராவதியில் முதியவர் சடலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ரயில் நிலையம் அருகே இன்று (டிச.8) இரவு தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் கிடப்பதாக நாங்குநேரி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் ரயில்வே அலுவலர்களிடம் விசாரித்தனர்.

அதற்கு அவர்கள் இளைஞர் உயிரிழந்த நேரத்தில் கன்னியாகுமரி விரைவு ரயில் சென்றதாக தெரிவித்தனர். தொடர்ந்து இளைஞரின் அடையாள அட்டையை பார்த்ததில், அவர் நாங்குநேரி அடுத்த களக்காடு நபித்தோப்பு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஸ்ரீதர்(19) என்பதும் பெயிண்டிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

பின்னர் இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளைஞரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர்.

தற்போது இளைஞர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்துவிட்டு தண்டவாளத்தில் போட்டுச் சென்றார்களா? இல்லை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா? போன்ற கோணங்களில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: பொன்னமராவதியில் முதியவர் சடலம் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.