ETV Bharat / state

குற்றாலத்தில் குளிக்கத் தடை - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

நெல்லை: குற்றாலம் பேரருவியில் தண்ணீருடன் சேர்ந்து கல் விழுவதால் குளிப்பதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

author img

By

Published : Sep 15, 2019, 9:54 AM IST

courtallam falls

நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழை காரணமாக குற்றால அருவியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு குளிப்பதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில், வார இறுதி நாட்களில் ஒன்றான நேற்று விடுமுறை என்பதால் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்தனர்.

நேற்று காலை முதல் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் குற்றாலம் பேரருவியில் தண்ணீருடன் கல் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க காவல் துறையினர் தற்காலிகத் தடைவிதித்தனர்.

குற்றால அருவி

தற்காலிக தடை என்பதால் அருவியில் குளித்துவிட்டுச் செல்வதற்காக அங்கு ஏராளமான பொதுமக்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் இரவு முழுவதும் காத்திருந்தனர். இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழை காரணமாக குற்றால அருவியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு குளிப்பதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில், வார இறுதி நாட்களில் ஒன்றான நேற்று விடுமுறை என்பதால் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்தனர்.

நேற்று காலை முதல் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் குற்றாலம் பேரருவியில் தண்ணீருடன் கல் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க காவல் துறையினர் தற்காலிகத் தடைவிதித்தனர்.

குற்றால அருவி

தற்காலிக தடை என்பதால் அருவியில் குளித்துவிட்டுச் செல்வதற்காக அங்கு ஏராளமான பொதுமக்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் இரவு முழுவதும் காத்திருந்தனர். இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

Intro:குற்றாலம் பேரருவியில் கல் விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிக தடை


Body:நெல்லை மேற்கு மாவட்டம் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் பரவலாக நீர்வரத்து இருந்து வருகிறது இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர் இந்நிலையில் சுமார் பத்து முப்பது மணி அளவில் குற்றாலம் பேரருவியில் தண்ணீருடன் விழுவதாக காவல்துறையினர் தெரிவித்து சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதித்தனர் ஏராளமான சுற்றுலா பயணிகள் தடை விலகி குளிக்க அனுமதிக்காக இரவும் பாராமல் காத்திருக்கின்றனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.