கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக நீட்டிக்கப்படுள்ளது. இதனால் கரோனா பாதிக்கப்பட்டுள்ள பகுதியை கணக்கிட்ட மத்திய அரசு, அந்தந்த பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்ற அடிப்படையில் 3 மண்டலங்களாக பிரித்துள்ளது. இதில் சிவப்பு மண்டலத்தில் எந்தவித தளர்வுகளும் இல்லை எனவும் ஆரஞ்ச், பச்சை உள்ளிட்ட மண்டலங்களுக்கு சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஜார்கண்ட், பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நெல்லை மாவட்டத்தில் போர்வை விற்பனை, ஐஸ்கிரீம், பானி பூரி போன்ற தொழில்கள் செய்து வருகின்றனர்.
இதனையடுத்து, கரோனா தாக்குதலினால் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால், தாங்கள் தங்கி இருக்கும் விடுதிகளில் மாத வாடகை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர் என வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் தினந்தோறும் உணவுக்கு மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்லது. எனவே தங்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் எந்தப் பகுதிக்கு செல்ல வேண்டும் என்பதை இ-சேவை மூலம் விண்ணப்பித்து, அதன் மூலம் தங்கள் மாநிலத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: மூன்றாம் கட்ட ஊரடங்கு... சொந்த ஊருக்கு புறப்படும் வடமாநில மக்கள்