ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி: செங்கோட்டையில் அசம்பாவிதமின்றி முடிந்த ஊர்வலம்! - 36 vinayagar statue

தென்காசி: செங்கோட்டையில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் இனிதே நிறைவடைந்து, வெற்றிகரமாக விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன.

செங்கோட்டையில் விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டது
author img

By

Published : Sep 3, 2019, 8:18 PM IST

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
சென்ற ஆண்டு நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் இறுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் கல்வீச்சு, கடையடைப்பு , உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன.

செங்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டது

இந்நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தென் மண்டல ஐஜி உத்தரவின் பேரில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணியளவில் செங்கோட்டை வண்டிமலைச்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட விநாயகர் ஊர்வலம், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

இதில் 36 விநாயகர் சிலைகள் இடம்பெற்றன, போலீசாரின் தீவிர முயற்சியால் பதட்டமான பகுதி என அறியப்பட்டுள்ள பள்ளிவாசல் தெரு, கம்போஸ் ரோடு, பெரியசாமி தெரு வழியாக எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் கடந்து வந்தது ஊர்வலம் முடிந்தது. அதன்பிறகு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர்.36 சிலைகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஆற்றில் கரைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் ஊர்வலம் நடந்த பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டடார். இரவு பகல் பாராமல் உழைத்து இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் நடத்திக் கொடுத்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
சென்ற ஆண்டு நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் இறுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் கல்வீச்சு, கடையடைப்பு , உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன.

செங்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டது

இந்நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தென் மண்டல ஐஜி உத்தரவின் பேரில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணியளவில் செங்கோட்டை வண்டிமலைச்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட விநாயகர் ஊர்வலம், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

இதில் 36 விநாயகர் சிலைகள் இடம்பெற்றன, போலீசாரின் தீவிர முயற்சியால் பதட்டமான பகுதி என அறியப்பட்டுள்ள பள்ளிவாசல் தெரு, கம்போஸ் ரோடு, பெரியசாமி தெரு வழியாக எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் கடந்து வந்தது ஊர்வலம் முடிந்தது. அதன்பிறகு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர்.36 சிலைகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஆற்றில் கரைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் ஊர்வலம் நடந்த பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டடார். இரவு பகல் பாராமல் உழைத்து இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் நடத்திக் கொடுத்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

Intro:"யப்பா தப்பிச்சேன்டா !!!" - விநாயகர் மகிழ்ச்சி ! காவல்துறையினர் பெருமுச்சு !! மாவட்ட ஆட்சியர் பெருமிதம் !!! செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலம் இனிதே நிறைவடைந்தது


Body:தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் சென்ற ஆண்டு விழாவின்போது இறுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் கல்வீச்சு கடையடைப்பு கருப்பு உள்ளிட்ட சம்பவங்கள் ஏற்பட்டது இந்நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா எந்த ஒரு பல சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் மண்டல ஐஜி உத்தரவின் பேரில் சுமார் 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் நிலையில் சுமார் ஒரு மணி அளவில் செங்கோட்டை வண்டிமலைச்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட விநாயகர் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது இதில் 36 விநாயகர் சிலைகள் இடம்பெற்றன போலீசாரின் தீவிர முயற்சியால் பதட்டமான பகுதி என அறியப்பட்டுள்ள பள்ளிவாசல் தெரு கம்போஸ் ரோடு பெரியசாமி தெரு வழியாக எந்த அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் கடந்து வந்தது ஊர்வலம் முடிந்தபின் செங்கோட்டை பொண்டாட்டி இரண்டு பெண்கள் ஏற்பாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர் மேலும் 36 சிலைகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஆற்றில் கரைக்க துவங்கப்பட்டது மாவட்ட ஆட்சியர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் ஊர்வலம் நடந்த பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது மேலும் அனைத்து முன்னேற்பாடுகளும் காவல்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர் மற்றும் இரவு பகல் பாராமல் உழைத்து இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை எத்தனையோ சம்பவங்கள் நடைபெறாமல் நடத்திக் கொடுத்த காவல்துறையினர் பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்


Conclusion:பேட்டி
திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ்
மாவட்ட ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்டம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.