ETV Bharat / state

மகளை நாய் கடித்ததை தட்டிக்கேட்ட தந்தை வெட்டி கொலை.. நெல்லையில் பயங்கரம்!

author img

By

Published : Aug 4, 2023, 6:47 AM IST

Updated : Aug 4, 2023, 9:11 AM IST

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் மகளை நாய் கடித்ததை தட்டிக்கேட்ட தந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசை மகளை நாய் கடித்ததை தட்டி கேட்ட தந்தை வெட்டி கொலை
ஆசை மகளை நாய் கடித்ததை தட்டி கேட்ட தந்தை வெட்டி கொலை

திருநெல்வேலி: சுத்தமல்லி வஉசி நகர் பகுதியைச் சேர்ந்தவர், கொம்பையா (55). இவர் கால்நடைகள் வைத்து பராமரித்து வருவதுடன் விவசாயம் செய்தும் வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த ஜூலை 30ம் தேதி இவரது மகளை வீட்டின் அருகே உள்ள கருத்தபாண்டி என்பவரது வீட்டின் நாய் கடித்ததாகவும் இதனை கேட்க சென்றபோது முறையாக பதிலளிக்க கருத்தபாண்டி மறுத்ததாகவும் அவரயும் அலட்சியம் செய்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நாய் கடி விவகாரம் தொடர்பாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் கொம்பையா புகார் செய்திருந்தார். இந்த நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகள் நடந்து வந்து உள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 3) வழக்கமாக கால்நடைகளை மேய்ப்பதற்கு சுத்தமல்லி கோபால சமுத்திரம் சாலையில் உள்ள வயல் வெளிக்கு கொம்பையா சென்றுள்ளார்.

இதையும் படிங்க: உணவு டெலிவரி ஊழியர் வெட்டி கொலை, வீட்டை சூறையாடிய ஊர் மக்கள்; நெல்லையில் பரபரப்பு!!

மதிய வேளையில் வயல்வெளியில் இருந்த கொம்பையாவை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெட்ட முயற்சித்துள்ளனர்.அதனை அறிந்து அங்கிருந்து கொம்பையா தப்பி ஓடி உள்ளார்.இருந்த போதிலும் துரத்திச் சென்று மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்தை சாலையில் சென்றவர்கள் பார்த்து சுத்தமல்லி காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சுத்தமல்லி போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்த கொம்பையாவின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகளை நாய் கடித்த சம்பவத்தின் காரணமாக சுப்பையா அளித்த புகாருக்கு இன்றைய தினம் சுத்தமல்லி போலீசார் கருத்தபாண்டியை விசாரணை செய்ய காவல் துறையினர் வர கூறியதால் ஆத்திரம் அடைந்து இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முன் விரோதம் காரணமாக கொம்பையாவை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: சாதிப்பெயரைச் சொல்லி திட்டியதால் இளைஞர் தற்கொலை முயற்சி - நடந்தது என்ன?

திருநெல்வேலி: சுத்தமல்லி வஉசி நகர் பகுதியைச் சேர்ந்தவர், கொம்பையா (55). இவர் கால்நடைகள் வைத்து பராமரித்து வருவதுடன் விவசாயம் செய்தும் வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த ஜூலை 30ம் தேதி இவரது மகளை வீட்டின் அருகே உள்ள கருத்தபாண்டி என்பவரது வீட்டின் நாய் கடித்ததாகவும் இதனை கேட்க சென்றபோது முறையாக பதிலளிக்க கருத்தபாண்டி மறுத்ததாகவும் அவரயும் அலட்சியம் செய்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நாய் கடி விவகாரம் தொடர்பாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் கொம்பையா புகார் செய்திருந்தார். இந்த நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகள் நடந்து வந்து உள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 3) வழக்கமாக கால்நடைகளை மேய்ப்பதற்கு சுத்தமல்லி கோபால சமுத்திரம் சாலையில் உள்ள வயல் வெளிக்கு கொம்பையா சென்றுள்ளார்.

இதையும் படிங்க: உணவு டெலிவரி ஊழியர் வெட்டி கொலை, வீட்டை சூறையாடிய ஊர் மக்கள்; நெல்லையில் பரபரப்பு!!

மதிய வேளையில் வயல்வெளியில் இருந்த கொம்பையாவை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெட்ட முயற்சித்துள்ளனர்.அதனை அறிந்து அங்கிருந்து கொம்பையா தப்பி ஓடி உள்ளார்.இருந்த போதிலும் துரத்திச் சென்று மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்தை சாலையில் சென்றவர்கள் பார்த்து சுத்தமல்லி காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சுத்தமல்லி போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்த கொம்பையாவின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகளை நாய் கடித்த சம்பவத்தின் காரணமாக சுப்பையா அளித்த புகாருக்கு இன்றைய தினம் சுத்தமல்லி போலீசார் கருத்தபாண்டியை விசாரணை செய்ய காவல் துறையினர் வர கூறியதால் ஆத்திரம் அடைந்து இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முன் விரோதம் காரணமாக கொம்பையாவை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: சாதிப்பெயரைச் சொல்லி திட்டியதால் இளைஞர் தற்கொலை முயற்சி - நடந்தது என்ன?

Last Updated : Aug 4, 2023, 9:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.