ETV Bharat / state

அடிப்படையே சரியில்லாதபோது மற்றவற்றை எப்படி சிந்திப்பது? திருநெல்வேலி திமுக வேட்பாளருடன் ஒரு நேர்காணல்...

author img

By

Published : Mar 25, 2021, 12:51 PM IST

தனது தொகுதியில் அடிப்படைக் கட்டமைப்பே சரியில்லாதபோது பிற முக்கியத் திட்டங்கள் குறித்து எப்படி திட்டமிடுவது என திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

if fundamental was wrong How to think others Tirunelveli DMK candidate questioned
if fundamental was wrong How to think others Tirunelveli DMK candidate questioned

திருநெல்வேலி: நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் திமுக சார்பில் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்று பெற்று தற்போது நடப்பு சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சார்ந்த இவரின் தந்தை ஏ.எல். சுப்ரமணியன் இதே திருநெல்வேலி தொகுதியில் மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இந்தச் சூழலில் தொகுதி மக்கள் சார்பில் திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணனிடம் ஈடிவி பாரத் சில கேள்விகளை முன்வைத்து நேர்காணல் மேற்கொண்டது. அதனை இப்போது காணலாம்.

இந்தத் தொகுதியில் நீங்கள் போட்டியிட காரணம் என்ன? எதற்காக இந்தத் தொகுதியை தேர்ந்தெடுத்தீர்கள்?

நான் தொடர்ந்து மூன்றாவது முறை இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன். நான் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவன் என்பதால் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறேன்.

தொகுதியின் முக்கியப் பிரச்னையாக எதைப் பார்க்கிறீர்கள்?

வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் தான் இத்தொகுதியில் முக்கியப் பிரச்னை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இங்கு சாதிக் கலவரத்தை ஒழிக்க ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைத்து தொழிற்சாலைகளை அமைக்க ஏற்பாடு செய்தார். அதன்படி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அங்கு பெரிய அளவில் தொழிற்சாலைகள் வரவில்லை. இதனால் இளைஞர்கள் வேலையில்லாமல், சென்னைக்கு செல்ல வேண்டியுள்ளது. அதேபோல் கருணாநிதி கொண்டுவந்த ஐடி பூங்காவும் செயல்பாட்டில் இல்லாமல் இருக்கிறது.

மானூர், பள்ளமடை என இரண்டு பெரிய குளங்கள் இங்குள்ளன. தாமிரபரணி ஆற்றின் மிகை நீரைக் கொண்டு வந்தால் இரண்டு குளங்களும் நிறைந்து செழிப்பான விவசாயம் நடைபெறும் .ஆனால் அந்த நீரை கொண்டுவர அரசு எந்தத் திட்டமும் செயல்படுத்தவில்லை. இதனால் மழைக்காலங்களில் குளங்கள் நிரம்புவதில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே இந்தக் குளம் நிரம்பியுள்ளது. சட்டப்பேரவையில் இது தொடர்பாக இரண்டு முறை குரலெழுப்பியும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தொகுதியில் நீங்கள் வெற்றி பெற்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்களின் செயல் திட்டம் என்னவாக இருக்கும்?

வேலைவாய்ப்பை பெருக்குவதுதான் முக்கியத் திட்டம். பேட்டை பகுதியில் 2001ஆம் ஆண்டு மூடப்பட்ட கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் கொண்டு வந்தால் வேலை வாய்ப்பு பெருகும். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்.

ஆளும் கட்சியாக இருந்தால் எப்படி செயல்படுவீர்கள்? எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான தேவைகளை எப்படி கேட்டுப் பெறுவீர்கள்?

எதிர்க்கட்சியாக இருந்தால் போராடிக் கொண்டே தான் இருக்க வேண்டும். திருநெல்வேலியில் ’ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரில் என்னென்ன கொடுமைகள் நடக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அலுவலர்கள் சில தவறுகளுக்கு உடந்தையாக செயல்படுகின்றனர்.

போதிய திட்டமிடல் இல்லாமல் பணிகளை செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சியாக இருந்தால் மட்டும்தான் தொகுதியில் வேலை செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளதால், திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியும். இல்லையெனில் திட்டங்களை நடைமுறைப்படுத்த தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

’அடிப்படையே சரியில்லாதபோது மற்றவற்றை எப்படி சிந்திப்பது?' - ஏ.எல்.எஸ். லட்சுமணன்

அடிப்படை தேவைகளைக் கடந்து தொகுதியில் செயல்படுத்த நினைக்கும் முக்கியத் திட்டங்கள் என்ன?

அடிப்படை தேவைகள் தான் பிரதானம். எனது தொகுதியில் அடிப்படைக் கட்டமைப்பே சரியில்லாதபோது பிற முக்கியத் திட்டங்கள் குறித்து எப்படி திட்டமிடுவது?

அரசியல், கட்சி கொள்கைகளைக் கடந்து மக்கள் உங்களை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

60 ஆண்டுகளாக எங்களது குடும்பம் திமுகவில் அங்கம் வகித்து வருகிறது. கட்சி தான் எனக்கு எல்லாம். தனிப்பட்ட முறையில் எனக்கு ஒன்றுமே இல்லை.

உங்கள் சக போட்டியாளர் நயினார் நாகேந்திரன் குறித்து அதிக வதந்திகள் பரப்பப்படுகிறதே?

அவை குறித்து கருத்து தெரிவிக்க இயலாது. அனைவரும் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்குடனே போட்டியிடுகின்றனர்” என்றார்.

திருநெல்வேலி: நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் திமுக சார்பில் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்று பெற்று தற்போது நடப்பு சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சார்ந்த இவரின் தந்தை ஏ.எல். சுப்ரமணியன் இதே திருநெல்வேலி தொகுதியில் மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இந்தச் சூழலில் தொகுதி மக்கள் சார்பில் திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணனிடம் ஈடிவி பாரத் சில கேள்விகளை முன்வைத்து நேர்காணல் மேற்கொண்டது. அதனை இப்போது காணலாம்.

இந்தத் தொகுதியில் நீங்கள் போட்டியிட காரணம் என்ன? எதற்காக இந்தத் தொகுதியை தேர்ந்தெடுத்தீர்கள்?

நான் தொடர்ந்து மூன்றாவது முறை இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன். நான் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவன் என்பதால் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறேன்.

தொகுதியின் முக்கியப் பிரச்னையாக எதைப் பார்க்கிறீர்கள்?

வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் தான் இத்தொகுதியில் முக்கியப் பிரச்னை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இங்கு சாதிக் கலவரத்தை ஒழிக்க ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைத்து தொழிற்சாலைகளை அமைக்க ஏற்பாடு செய்தார். அதன்படி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அங்கு பெரிய அளவில் தொழிற்சாலைகள் வரவில்லை. இதனால் இளைஞர்கள் வேலையில்லாமல், சென்னைக்கு செல்ல வேண்டியுள்ளது. அதேபோல் கருணாநிதி கொண்டுவந்த ஐடி பூங்காவும் செயல்பாட்டில் இல்லாமல் இருக்கிறது.

மானூர், பள்ளமடை என இரண்டு பெரிய குளங்கள் இங்குள்ளன. தாமிரபரணி ஆற்றின் மிகை நீரைக் கொண்டு வந்தால் இரண்டு குளங்களும் நிறைந்து செழிப்பான விவசாயம் நடைபெறும் .ஆனால் அந்த நீரை கொண்டுவர அரசு எந்தத் திட்டமும் செயல்படுத்தவில்லை. இதனால் மழைக்காலங்களில் குளங்கள் நிரம்புவதில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே இந்தக் குளம் நிரம்பியுள்ளது. சட்டப்பேரவையில் இது தொடர்பாக இரண்டு முறை குரலெழுப்பியும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தொகுதியில் நீங்கள் வெற்றி பெற்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்களின் செயல் திட்டம் என்னவாக இருக்கும்?

வேலைவாய்ப்பை பெருக்குவதுதான் முக்கியத் திட்டம். பேட்டை பகுதியில் 2001ஆம் ஆண்டு மூடப்பட்ட கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் கொண்டு வந்தால் வேலை வாய்ப்பு பெருகும். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்.

ஆளும் கட்சியாக இருந்தால் எப்படி செயல்படுவீர்கள்? எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான தேவைகளை எப்படி கேட்டுப் பெறுவீர்கள்?

எதிர்க்கட்சியாக இருந்தால் போராடிக் கொண்டே தான் இருக்க வேண்டும். திருநெல்வேலியில் ’ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரில் என்னென்ன கொடுமைகள் நடக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அலுவலர்கள் சில தவறுகளுக்கு உடந்தையாக செயல்படுகின்றனர்.

போதிய திட்டமிடல் இல்லாமல் பணிகளை செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சியாக இருந்தால் மட்டும்தான் தொகுதியில் வேலை செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளதால், திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியும். இல்லையெனில் திட்டங்களை நடைமுறைப்படுத்த தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

’அடிப்படையே சரியில்லாதபோது மற்றவற்றை எப்படி சிந்திப்பது?' - ஏ.எல்.எஸ். லட்சுமணன்

அடிப்படை தேவைகளைக் கடந்து தொகுதியில் செயல்படுத்த நினைக்கும் முக்கியத் திட்டங்கள் என்ன?

அடிப்படை தேவைகள் தான் பிரதானம். எனது தொகுதியில் அடிப்படைக் கட்டமைப்பே சரியில்லாதபோது பிற முக்கியத் திட்டங்கள் குறித்து எப்படி திட்டமிடுவது?

அரசியல், கட்சி கொள்கைகளைக் கடந்து மக்கள் உங்களை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

60 ஆண்டுகளாக எங்களது குடும்பம் திமுகவில் அங்கம் வகித்து வருகிறது. கட்சி தான் எனக்கு எல்லாம். தனிப்பட்ட முறையில் எனக்கு ஒன்றுமே இல்லை.

உங்கள் சக போட்டியாளர் நயினார் நாகேந்திரன் குறித்து அதிக வதந்திகள் பரப்பப்படுகிறதே?

அவை குறித்து கருத்து தெரிவிக்க இயலாது. அனைவரும் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்குடனே போட்டியிடுகின்றனர்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.