ETV Bharat / state

ஹரிநாடார் விவகாரம்: மூன்று பேர் கைது - hari nadar

நெல்லை: கடன் வாங்கித் தருவதாக ஹரிநாடார் ஏமாற்றிய விவகாரத்தில் நெல்லையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேரை கர்நாடக மாநில போலீசார் கைது செய்தனர்.

ஹரிநாடார் விவகாரம்: மூன்று பேர் கைது
ஹரிநாடார் விவகாரம்: மூன்று பேர் கைது
author img

By

Published : Jun 17, 2021, 7:44 AM IST

பனங்காட்டுப்படை கட்சியைச் சேர்ந்த ஹரி நாடார் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

தேர்தல் முடிவு வெளியான ஓரிரு நாட்களில் கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த பண மோசடிப் புகாரின் பேரில் திருவனந்தபுரத்தில் தலைமறைவாக இருந்த ஹரி நாடாரை கர்நாடக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தச் சூழ்நிலையில் குஜராத் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு தொழிலதிபர்கள் ஹரி நாடார் மீது சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.

அதில், வங்கியில் குறைந்த வட்டியில் 100 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொழிலதிபர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேரை கர்நாடக போலீசார் கைது செய்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி நெல்லை மாவட்டம், வள்ளியூரைச் சார்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால், சங்கர் மற்றும் காலியத் ஆகிய மூவரை கர்நாடக போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இவர்கள் 3 பேரும் ஹரிநாடாரின் பண மோசடி விவகாரத்தில், அவருக்கு உதவியாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. அதனடிப்படையிலேயே தற்போது அவர்களை போலீசார் கைது செய்திருப்பதாகவும் தெரிகிறது.

இதையும் படிங்க: அவதூறுப் பேச்சால் பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சுவாமி அதிரடி கைது

பனங்காட்டுப்படை கட்சியைச் சேர்ந்த ஹரி நாடார் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

தேர்தல் முடிவு வெளியான ஓரிரு நாட்களில் கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த பண மோசடிப் புகாரின் பேரில் திருவனந்தபுரத்தில் தலைமறைவாக இருந்த ஹரி நாடாரை கர்நாடக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தச் சூழ்நிலையில் குஜராத் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு தொழிலதிபர்கள் ஹரி நாடார் மீது சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.

அதில், வங்கியில் குறைந்த வட்டியில் 100 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொழிலதிபர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேரை கர்நாடக போலீசார் கைது செய்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி நெல்லை மாவட்டம், வள்ளியூரைச் சார்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால், சங்கர் மற்றும் காலியத் ஆகிய மூவரை கர்நாடக போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இவர்கள் 3 பேரும் ஹரிநாடாரின் பண மோசடி விவகாரத்தில், அவருக்கு உதவியாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. அதனடிப்படையிலேயே தற்போது அவர்களை போலீசார் கைது செய்திருப்பதாகவும் தெரிகிறது.

இதையும் படிங்க: அவதூறுப் பேச்சால் பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சுவாமி அதிரடி கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.