ETV Bharat / state

முன்னாள் மேயர் கொலை - சிசிடிவி காட்சி வெளியீடு!

திருநெல்வேலி: திமுகவின் முன்னாள் மேயர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

author img

By

Published : Jul 24, 2019, 11:14 PM IST

Updated : Jul 25, 2019, 9:50 AM IST

முன்னாள் மேயர் கொலை வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் ஆகிய மூன்று பேர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில், மூன்று தனிப்படை அமைத்து இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில், இன்று அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை தனிப்படையினர் ஆய்வு செய்தபோது, இந்த கொலை சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அந்தப் பகுதி வழியாக இரண்டு இளைஞர்கள் சந்தேகப்படும் வகையில் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த இளைஞர்கள் யார், எதற்காக இங்கு வந்தனர் என்பது குறித்த விசாரணையை தனிப்படையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

சிசிடிவியில் பதிவான இரண்டு  இளைஞர்கள்
சிசிடிவியில் பதிவான இரண்டு இளைஞர்கள்

திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் ஆகிய மூன்று பேர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில், மூன்று தனிப்படை அமைத்து இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில், இன்று அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை தனிப்படையினர் ஆய்வு செய்தபோது, இந்த கொலை சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அந்தப் பகுதி வழியாக இரண்டு இளைஞர்கள் சந்தேகப்படும் வகையில் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த இளைஞர்கள் யார், எதற்காக இங்கு வந்தனர் என்பது குறித்த விசாரணையை தனிப்படையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

சிசிடிவியில் பதிவான இரண்டு  இளைஞர்கள்
சிசிடிவியில் பதிவான இரண்டு இளைஞர்கள்
Intro:நெல்லையில் முன்னாள் மேயர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Body:

நெல்லையில் நேற்று முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் பணிப்பெண் ஆகியோர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று தனிப்படை அமைத்து இந்த கொலை தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில் இன்று அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளில் தனிப்படையினர் நடத்திய விசாரணையில் இந்த கொலை சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அந்த பகுதி வழியாக இரண்டு இளைஞர்கள் சந்தேகப்படும் வகையில் நடந்து வருகின்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.

மேலும் இந்த இளைஞர்கள் யார் இவர்கள் இங்கு என்ன செய்கின்றனர் என்பது குறித்த விசாரணையை தனிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் இந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.Conclusion:
Last Updated : Jul 25, 2019, 9:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.