ETV Bharat / state

நெல்லை திருமண்டல பொறுப்பு விவகாரத்தில் ரூ.5 லட்சம் லஞ்சம்? - ஆட்சியர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்!

author img

By

Published : Aug 7, 2023, 10:10 AM IST

நெல்லை திருமண்டல பொறுப்பு விவகாரத்தில் ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு தீர்ப்பை மாற்றி விட்டதாக நெல்லை ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் மீது திமுக எம்.பி தரப்பினர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளனர்.

நெல்லை திருமண்டல பொறுப்பு குறித்த விவகாரத்தில் நெல்லை கலெக்டர் மீது  பரபரப்பு குற்றச்சாட்டு
நெல்லை திருமண்டல பொறுப்பு குறித்த விவகாரத்தில் நெல்லை கலெக்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
ஆட்சியர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்!

திருநெல்வேலி: தென்னிந்திய திருச்சபை என்று அழைக்கப்படும் சி.எஸ்.ஐ நெல்லை திருமண்டலத்தின் அலுவலகம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது. இந்த திருமண்டலத்தின் பேராயராக பர்னபாஸ் இருந்து வருகிறார். லே செயலாளராக ஜெயசிங் பதவி வகித்து வருகிறார். திருமண்டலத்துக்கு சொந்தமாக பள்ளி, கல்லூரிகள் என 300க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கல்லூரி நிறுவனங்களுக்கு தேர்தல் மூலம் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் திருமண்டலத்தின் கீழ் இயங்கும் பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளியின் தாளாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் திருமண்டலத்தில் பேராயர் பர்னபாஸ் தரப்பினர் ஒரு பிரிவாகவும், லே செயலாளர் ஜெயசிங் தரப்பினர் ஒரு பிரிவாகவும் பல மாதங்களாக மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக எம்.பி ஞானதிரவியம் லே செயலாளர் ஆதரவாகவும், பேராயருக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் திமுக எம்பி ஞானதிரவியம் திருமண்டலத்தின் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். எனவே திருமண்டல நிர்வாகத்தை கண்டித்து எம்பி தரப்பினர் தொடர் மோதலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி பிஷப் பர்னபாஸ் தரப்பைச் சேர்ந்த மதபோதகர் காட்பரே நோபல் உள்ளிட்டோர் கூட்டாக திருமண்டல அலுவலகத்திற்கு சென்ற போது, அங்கிருந்த எம்.பி ஞானதிரவியம் தரப்பினர், காட்பிரே நோபலை காலால் எட்டி உதைத்து ஓட ஓட விரட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து திருமண்டல அலுவலகம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவைகளை காரணம் காட்டி மூடப்பட்டது. இந்த விவகாரம் இருதரப்பு சார்ந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பதனால், குற்ற விசாரணை சட்டம் பிரிவு 145 ன் கீழ் இரு தரப்பைச் சேர்ந்த தலா 16 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்கு விசாரணை அதிகாரியான நெல்லை கோட்ட நடுவர் நீதிமன்றத்தில் கோட்டாட்சியர் (பொ) கார்த்திகாயினி இரு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் பேராயர் தரப்பினர் நெல்லை திருமண்டல அலுவலகத்தை திறக்க அனுமதி வழங்கியதுடன், பேராயரிடம் அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பேராயருக்கே திருமண்டலத்தில் முழு அதிகாரம் உள்ளது. எனவே அவர் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

திருமண்டலத்தின் சகல குழுக்களையும், மண்டலங்களையும் தலைமை வகிக்க பேராயருக்கே உரிமை உண்டு எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது. எனவே வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் நெல்லை சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகம் நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. கோட்டாட்சியர் விசாரணையின் தீர்ப்பு பேராயருக்கு ஆதரவாக வெளியானதால், எம்.பி தரப்பினர் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக லே செயலாளர் மற்றும் எம்.பி தரப்பைச் சேர்ந்த டயோசிசன் சொத்து நிர்வாக அதிகாரியான வழக்கறிஞர் ஜான் என்பவர் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் மற்றும் நெல்லை கோட்டாட்சியர்(பொ) கார்த்திகாயினி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை துணை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும் அந்த புகாரில் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு முறையாக எந்த ஆவணங்களையும் பார்க்காமல், எந்த புகாரையும் பரிசீலிக்காமல் ஒருதலை பச்சமாக குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 145 தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். கோட்டாட்சியர் விசாரித்த வழக்கில் பேராயர் தரப்பை அ பிரிவு என்றும் லே செயலாளர் தரப்பை ஆ பிரிவு எனவும் குறிப்பிட்டு, இருபிரிவிலும் தலா 16 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

இதில் பேராயர் தரப்பில் உள்ள 16 பேரும் சி.எஸ்.ஐ திருமண்டலத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் லே செயலாளர் தரப்பைச் சேர்ந்த நபர்களான நாங்கள் தடை ஆணை பெற்றிருக்கிறோம். அதையும் பொருட்படுத்தாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு 5 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்து தான் பெறப்பட்டுள்ளது.

மேலும் நெல்லை கோட்டாட்சியர் பொறுப்பில் இருக்கும் அதிகாரி நில எடுப்பு பிரிவின் அதிகாரியாக உள்ளார். நதிநீர் இணைப்பு திட்டத்திற்கான நில எடுப்பு பணிகளுக்கு, விவசாயிகளுக்கு பணம் கொடுப்பதற்கு பத்து சதவீதம் லஞ்சம், 5% புரோக்கர் கமிஷனாக இவர் பெறுவதாகவும் குற்றச்சாட்டை லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பிய புகாரில் வழக்கறிஞர் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவலை துணை இயக்குனர் உரிய விசாரணை நடத்தி லஞ்சம் பெற்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளார். திமுக எம்.பி ஞான திரவியம் தூண்டுதலின் பெயரில் தான் ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் மீது புகார் அளிக்கப்பட்டதாக திருமண்டல வட்டாரம் தெரிவிக்கிறது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் திமுக தலைமை, எம்.பி ஞானதிரவியத்தை கடுமையாக எச்சரித்திருந்தது.

குறிப்பாக மத போதகர் கடுமையாக தாக்கப்பட்ட போது இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்கும்படி திமுக தலைமை எம்.பிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இது போன்ற சூழ்நிலையில் மீண்டும் எம்.பி தரப்பினர் திருமண்டல விவகாரத்தை கையில் எடுத்திருப்பதோடு மட்டுமல்லாமல், மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் மீது லஞ்ச புகார் தெரிவித்துள்ள சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Pakistan Train Accident: பாகிஸ்தானில் பயணிகள் ரயில் தடம்புரண்டு கோர விபத்து.. 22 பேர் பலி!

ஆட்சியர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்!

திருநெல்வேலி: தென்னிந்திய திருச்சபை என்று அழைக்கப்படும் சி.எஸ்.ஐ நெல்லை திருமண்டலத்தின் அலுவலகம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது. இந்த திருமண்டலத்தின் பேராயராக பர்னபாஸ் இருந்து வருகிறார். லே செயலாளராக ஜெயசிங் பதவி வகித்து வருகிறார். திருமண்டலத்துக்கு சொந்தமாக பள்ளி, கல்லூரிகள் என 300க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கல்லூரி நிறுவனங்களுக்கு தேர்தல் மூலம் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் திருமண்டலத்தின் கீழ் இயங்கும் பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளியின் தாளாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் திருமண்டலத்தில் பேராயர் பர்னபாஸ் தரப்பினர் ஒரு பிரிவாகவும், லே செயலாளர் ஜெயசிங் தரப்பினர் ஒரு பிரிவாகவும் பல மாதங்களாக மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக எம்.பி ஞானதிரவியம் லே செயலாளர் ஆதரவாகவும், பேராயருக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் திமுக எம்பி ஞானதிரவியம் திருமண்டலத்தின் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். எனவே திருமண்டல நிர்வாகத்தை கண்டித்து எம்பி தரப்பினர் தொடர் மோதலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி பிஷப் பர்னபாஸ் தரப்பைச் சேர்ந்த மதபோதகர் காட்பரே நோபல் உள்ளிட்டோர் கூட்டாக திருமண்டல அலுவலகத்திற்கு சென்ற போது, அங்கிருந்த எம்.பி ஞானதிரவியம் தரப்பினர், காட்பிரே நோபலை காலால் எட்டி உதைத்து ஓட ஓட விரட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து திருமண்டல அலுவலகம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவைகளை காரணம் காட்டி மூடப்பட்டது. இந்த விவகாரம் இருதரப்பு சார்ந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பதனால், குற்ற விசாரணை சட்டம் பிரிவு 145 ன் கீழ் இரு தரப்பைச் சேர்ந்த தலா 16 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்கு விசாரணை அதிகாரியான நெல்லை கோட்ட நடுவர் நீதிமன்றத்தில் கோட்டாட்சியர் (பொ) கார்த்திகாயினி இரு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் பேராயர் தரப்பினர் நெல்லை திருமண்டல அலுவலகத்தை திறக்க அனுமதி வழங்கியதுடன், பேராயரிடம் அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பேராயருக்கே திருமண்டலத்தில் முழு அதிகாரம் உள்ளது. எனவே அவர் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

திருமண்டலத்தின் சகல குழுக்களையும், மண்டலங்களையும் தலைமை வகிக்க பேராயருக்கே உரிமை உண்டு எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது. எனவே வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் நெல்லை சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகம் நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. கோட்டாட்சியர் விசாரணையின் தீர்ப்பு பேராயருக்கு ஆதரவாக வெளியானதால், எம்.பி தரப்பினர் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக லே செயலாளர் மற்றும் எம்.பி தரப்பைச் சேர்ந்த டயோசிசன் சொத்து நிர்வாக அதிகாரியான வழக்கறிஞர் ஜான் என்பவர் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் மற்றும் நெல்லை கோட்டாட்சியர்(பொ) கார்த்திகாயினி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை துணை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும் அந்த புகாரில் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு முறையாக எந்த ஆவணங்களையும் பார்க்காமல், எந்த புகாரையும் பரிசீலிக்காமல் ஒருதலை பச்சமாக குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 145 தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். கோட்டாட்சியர் விசாரித்த வழக்கில் பேராயர் தரப்பை அ பிரிவு என்றும் லே செயலாளர் தரப்பை ஆ பிரிவு எனவும் குறிப்பிட்டு, இருபிரிவிலும் தலா 16 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

இதில் பேராயர் தரப்பில் உள்ள 16 பேரும் சி.எஸ்.ஐ திருமண்டலத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் லே செயலாளர் தரப்பைச் சேர்ந்த நபர்களான நாங்கள் தடை ஆணை பெற்றிருக்கிறோம். அதையும் பொருட்படுத்தாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு 5 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்து தான் பெறப்பட்டுள்ளது.

மேலும் நெல்லை கோட்டாட்சியர் பொறுப்பில் இருக்கும் அதிகாரி நில எடுப்பு பிரிவின் அதிகாரியாக உள்ளார். நதிநீர் இணைப்பு திட்டத்திற்கான நில எடுப்பு பணிகளுக்கு, விவசாயிகளுக்கு பணம் கொடுப்பதற்கு பத்து சதவீதம் லஞ்சம், 5% புரோக்கர் கமிஷனாக இவர் பெறுவதாகவும் குற்றச்சாட்டை லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பிய புகாரில் வழக்கறிஞர் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவலை துணை இயக்குனர் உரிய விசாரணை நடத்தி லஞ்சம் பெற்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளார். திமுக எம்.பி ஞான திரவியம் தூண்டுதலின் பெயரில் தான் ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் மீது புகார் அளிக்கப்பட்டதாக திருமண்டல வட்டாரம் தெரிவிக்கிறது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் திமுக தலைமை, எம்.பி ஞானதிரவியத்தை கடுமையாக எச்சரித்திருந்தது.

குறிப்பாக மத போதகர் கடுமையாக தாக்கப்பட்ட போது இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்கும்படி திமுக தலைமை எம்.பிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இது போன்ற சூழ்நிலையில் மீண்டும் எம்.பி தரப்பினர் திருமண்டல விவகாரத்தை கையில் எடுத்திருப்பதோடு மட்டுமல்லாமல், மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் மீது லஞ்ச புகார் தெரிவித்துள்ள சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Pakistan Train Accident: பாகிஸ்தானில் பயணிகள் ரயில் தடம்புரண்டு கோர விபத்து.. 22 பேர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.