ETV Bharat / state

”புதிய பசுமைக் காடுகள் உருவாக்கப்படும்” -மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் - nellai trees calculation

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை பசுமையாக்கும் வகையில் மரங்கள், விலங்குகள் கணக்கெடுக்கப்பட்டு புதிய பசுமைக் காடுகள் உருவாக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  சிவக்குமார்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார்
author img

By

Published : Jun 11, 2021, 10:47 AM IST

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளையும் பசுமையாக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களை கணக்கெடுத்து புதிதாக மரங்கள் நடும் பணி தொடங்கியுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இணைய வழிக் கருத்தரங்கில் சூழலியலை மீட்டெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள தாவரங்கள், விலங்குகள் குறித்து கணக்கெடுத்து அந்த விவரஙகள் அனைவருக்கும் தெரியும் வகையில் காட்சிப்படுத்தப்படும்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார்

போதிய இடம் வசதியுள்ள பள்ளிகளில் அதிக மரங்களை வளர்த்து பசுமைக் காடுகளை உருவாக்க முடிவு செய்துள்ளோம். அதன் தொடக்க நிகழ்வாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ள மரங்கள்,விலங்குகள்,பூச்சியினங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளோம்.தொடர்ந்து அனைத்து பள்ளிகளலும் இந்த பணிகள் தொடங்கப்படும்.

தற்போதைக்கு இந்த பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் திட்டம் இல்லை. கணக்கெடுப்பின்போது ஆபத்தான விலங்குகள் இருந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து அவற்றை காடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம். ஏற்கனவே பள்ளிகளில் மரம் வளர்ப்பு திட்டம் இருந்தாலும், அதை அதிகப்படுத்தவே இந்த நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். தேவையான இடவசதி எங்கு இருக்கிறதோ அங்கு அதிகளவு மரங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: எழுபள்ளம் ஏரியில் குடிமராமத்து பணி மேற்கொள்ள வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளையும் பசுமையாக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களை கணக்கெடுத்து புதிதாக மரங்கள் நடும் பணி தொடங்கியுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இணைய வழிக் கருத்தரங்கில் சூழலியலை மீட்டெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள தாவரங்கள், விலங்குகள் குறித்து கணக்கெடுத்து அந்த விவரஙகள் அனைவருக்கும் தெரியும் வகையில் காட்சிப்படுத்தப்படும்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார்

போதிய இடம் வசதியுள்ள பள்ளிகளில் அதிக மரங்களை வளர்த்து பசுமைக் காடுகளை உருவாக்க முடிவு செய்துள்ளோம். அதன் தொடக்க நிகழ்வாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ள மரங்கள்,விலங்குகள்,பூச்சியினங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளோம்.தொடர்ந்து அனைத்து பள்ளிகளலும் இந்த பணிகள் தொடங்கப்படும்.

தற்போதைக்கு இந்த பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் திட்டம் இல்லை. கணக்கெடுப்பின்போது ஆபத்தான விலங்குகள் இருந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து அவற்றை காடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம். ஏற்கனவே பள்ளிகளில் மரம் வளர்ப்பு திட்டம் இருந்தாலும், அதை அதிகப்படுத்தவே இந்த நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். தேவையான இடவசதி எங்கு இருக்கிறதோ அங்கு அதிகளவு மரங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: எழுபள்ளம் ஏரியில் குடிமராமத்து பணி மேற்கொள்ள வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.