டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற ரூபி வாரியர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வுசெய்தது.
![பந்தை சிக்ஸருக்கு பறக்கவிடும் ஹரிஷ் குமார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3926471_image.jpg)
அதனைதொடர்ந்து களமிறங்கிய சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கௌசிக் காந்தி, ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்ற வீரர்களும் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியில் ஹரிஷ் குமார் சிறப்பாக விளையாடி 39 ரன்கள் சேர்த்தார்.
![பந்து வீசும் சரவன் குமார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3926471_image_i.jpg)
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சேப்பாக் சூர் கில்லீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு148 ரன்களை எடுத்தது. ரூபி வாரியர்ஸ் அணி சார்பில் சரவண் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்குடன் திருச்சி ரூபி வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.