ETV Bharat / state

இந்து மக்களை கொடுமைகளிலிருந்து காத்தது திராவிட இயக்கம் - சபாநாயகர் அப்பாவு

author img

By

Published : Oct 24, 2022, 9:28 AM IST

இந்து மக்களுக்கு கொடுமைகள் ஏற்பட்டபோது பாதுகாப்பாக இருந்த இயக்கம் திராவிட இயக்கம் என்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

திருநெல்வேலி: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் இந்த உலகிற்கு வந்த 200ஆவது ஆண்டு தொடக்கவிழா, தருமசால தொடங்கி 156ஆவது விழா மற்றும் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152ஆவது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா பாளையங்கோட்டையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரிதர்ஷனி தலைமையில் நேற்று (அக்.23) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு விழாவில் பேசுகையில், 'சாதி, மதம், இன வேறுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும், பசியோடு வருபவர்களுக்கு பசிபோக்க வேண்டும் என்ற உயர்ந்த சித்தாந்தத்தைக் கொண்டவர் வள்ளலார்.

இன்றும் 156 ஆண்டுகளாக வடலூரில் வள்ளலாரின் ஜோதி அணையாமல் எரிவதைப்போல் வந்தவர்களுக்கு பசி போக்கும் வகையில் அடுப்பு அணைக்கப்படாமல் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. வள்ளலார் கடவுளின் அவதாரமாக வாழ்ந்தவர். ஆகவே, அவரின் பெருமையை உலகறியச்செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பலகோடி ரூபாய் செலவு செய்து விழா எடுத்துள்ளார். 52 வாரங்கள் தமிழ்நாடு முழுவதும் வள்ளலார் முப்பெரும் விழா கொண்டாட முதலமைச்சர் உத்தரவிட்டதன் ஒருபகுதியாக, நெல்லையில் விழா நடத்தப்பட்டு வருகிறது. 'காலை சிற்றுண்டித் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம்' உள்ளிட்ட திட்டங்கள் மூலம் வள்ளலாரின் கொள்கைகளை அரகேற்றும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

இந்து மக்களுக்கு கொடுமைகள் ஏற்பட்ட போது பாதுகாப்பாக இருந்த இயக்கம் திராவிட இயக்கம், சாதி, மதம், இனம் இல்லா சமூதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு வித்திட்டவர் வள்ளலார் அதனை நடைமுறைப்படுத்தி வருவது திராவிட இயக்கம், முதலமைச்சர் உத்தரவுப்படி இன்று திருச்செந்தூர் முருகன் கோவில் புனரமைக்கப்பட்டு நவீனப்படுத்தும் பணி ரூ.300 கோடி ரூபாயில் நடக்கிறது' எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து சன்மார்க சபை நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர். மேலும், வள்ளலார் முப்பெரும் விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மேயர சரவணன், துணை மேயர் ராஜூ, மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயஸ்ரீ செல்லையா மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்து மக்களை கொடுமைகளிலிருந்து காத்தது திராவிட இயக்கம் - சபாநாயகர் அப்பாவு

இதையும் படிங்க: களைகட்டும் தீபாவளி: மயில் தோகை விரித்து ஆடும் புதுபுது டிசைன்கள்... மவுசு குறையாத சிவகாசி பட்டாசு...

திருநெல்வேலி: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் இந்த உலகிற்கு வந்த 200ஆவது ஆண்டு தொடக்கவிழா, தருமசால தொடங்கி 156ஆவது விழா மற்றும் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152ஆவது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா பாளையங்கோட்டையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரிதர்ஷனி தலைமையில் நேற்று (அக்.23) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு விழாவில் பேசுகையில், 'சாதி, மதம், இன வேறுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும், பசியோடு வருபவர்களுக்கு பசிபோக்க வேண்டும் என்ற உயர்ந்த சித்தாந்தத்தைக் கொண்டவர் வள்ளலார்.

இன்றும் 156 ஆண்டுகளாக வடலூரில் வள்ளலாரின் ஜோதி அணையாமல் எரிவதைப்போல் வந்தவர்களுக்கு பசி போக்கும் வகையில் அடுப்பு அணைக்கப்படாமல் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. வள்ளலார் கடவுளின் அவதாரமாக வாழ்ந்தவர். ஆகவே, அவரின் பெருமையை உலகறியச்செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பலகோடி ரூபாய் செலவு செய்து விழா எடுத்துள்ளார். 52 வாரங்கள் தமிழ்நாடு முழுவதும் வள்ளலார் முப்பெரும் விழா கொண்டாட முதலமைச்சர் உத்தரவிட்டதன் ஒருபகுதியாக, நெல்லையில் விழா நடத்தப்பட்டு வருகிறது. 'காலை சிற்றுண்டித் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம்' உள்ளிட்ட திட்டங்கள் மூலம் வள்ளலாரின் கொள்கைகளை அரகேற்றும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

இந்து மக்களுக்கு கொடுமைகள் ஏற்பட்ட போது பாதுகாப்பாக இருந்த இயக்கம் திராவிட இயக்கம், சாதி, மதம், இனம் இல்லா சமூதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு வித்திட்டவர் வள்ளலார் அதனை நடைமுறைப்படுத்தி வருவது திராவிட இயக்கம், முதலமைச்சர் உத்தரவுப்படி இன்று திருச்செந்தூர் முருகன் கோவில் புனரமைக்கப்பட்டு நவீனப்படுத்தும் பணி ரூ.300 கோடி ரூபாயில் நடக்கிறது' எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து சன்மார்க சபை நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர். மேலும், வள்ளலார் முப்பெரும் விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மேயர சரவணன், துணை மேயர் ராஜூ, மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயஸ்ரீ செல்லையா மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்து மக்களை கொடுமைகளிலிருந்து காத்தது திராவிட இயக்கம் - சபாநாயகர் அப்பாவு

இதையும் படிங்க: களைகட்டும் தீபாவளி: மயில் தோகை விரித்து ஆடும் புதுபுது டிசைன்கள்... மவுசு குறையாத சிவகாசி பட்டாசு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.