ETV Bharat / state

நெல்லை கல்குவாரி விபத்து - உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று அண்ணாமலை ஆறுதல்!

author img

By

Published : Jun 5, 2022, 9:02 PM IST

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினார்.

குவாரியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த அண்ணாமலை
குவாரியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த அண்ணாமலை

திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகில் உள்ள அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 15ஆம் தேதி திடீரென மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மீதி இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (ஜூன் 05) நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நெல்லை சென்றார். முன்னதாக அவர் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது குடும்பத்தார்கள் தங்களது குடும்பத்திற்கு ஏதாவது உதவிகளை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து அனைத்து உதவிகளையும் செய்யத்தயாராக இருப்பதாகவும் விரைவில் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் அண்ணாமலை உறுதியளித்தார். பின்பு உயிரிழந்தவர்களின் நான்கு குடும்பத்தாருக்கும் நிவாரண நிதியை வழங்கினார்.

குவாரியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த அண்ணாமலை

இதையும் படிங்க: கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேர்: அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி

திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகில் உள்ள அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 15ஆம் தேதி திடீரென மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மீதி இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (ஜூன் 05) நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நெல்லை சென்றார். முன்னதாக அவர் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது குடும்பத்தார்கள் தங்களது குடும்பத்திற்கு ஏதாவது உதவிகளை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து அனைத்து உதவிகளையும் செய்யத்தயாராக இருப்பதாகவும் விரைவில் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் அண்ணாமலை உறுதியளித்தார். பின்பு உயிரிழந்தவர்களின் நான்கு குடும்பத்தாருக்கும் நிவாரண நிதியை வழங்கினார்.

குவாரியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த அண்ணாமலை

இதையும் படிங்க: கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேர்: அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.