ETV Bharat / state

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா - Aadi Thabasu festival in sankarnakovil

நெல்லை: சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர், கோமதியம்பாள் திருக்கோயில் ஆடித்தபசு திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

aadi thabasu
author img

By

Published : Aug 14, 2019, 1:05 PM IST

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயணர், கோமதியம்பாள் திருக்கோயில் தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான விழா ஆகஸ்ட் மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தபசு திருவிழா பதினொறாம் நாளான நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவினையொட்டி கோமதியம்பாள் காலையில் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு கோயிலில் இருந்து எழுந்தருளி தெற்குரத வீதியில் உள்ள தபசு மண்டபத்தில் தவக் கோலத்தில் வீற்றிருந்தார்.

சங்கரன்கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற ஆடித்தபசு திருவிழா

பின்னர் மாலை சரியாக 6 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி சங்கரநாராயணர் எழுந்தருளி தெற்குரத வீதி தபசு மண்டபத்தில் வீற்றிருக்கும் அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. அப்போது அம்பாளுக்கு மாலை மாற்றும் வைபவம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர் .

மேலும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலில் குவிந்துள்ளதைத் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயணர், கோமதியம்பாள் திருக்கோயில் தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான விழா ஆகஸ்ட் மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தபசு திருவிழா பதினொறாம் நாளான நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவினையொட்டி கோமதியம்பாள் காலையில் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு கோயிலில் இருந்து எழுந்தருளி தெற்குரத வீதியில் உள்ள தபசு மண்டபத்தில் தவக் கோலத்தில் வீற்றிருந்தார்.

சங்கரன்கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற ஆடித்தபசு திருவிழா

பின்னர் மாலை சரியாக 6 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி சங்கரநாராயணர் எழுந்தருளி தெற்குரத வீதி தபசு மண்டபத்தில் வீற்றிருக்கும் அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. அப்போது அம்பாளுக்கு மாலை மாற்றும் வைபவம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர் .

மேலும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலில் குவிந்துள்ளதைத் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Intro:நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் , கோமதியம்பாள் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் .
         Body:நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் , கோமதியம்பாள் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் .
         
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சிவாலயங்களில் ஒன்று அருள்மிகு சங்கரநாராயணர் , கோமதியம்பாள் திருக்கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் ஆடித்தபசுத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும் . இந்த ஆண்டுக்கான விழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி , அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர் . இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தபசு திருவிழா 11-ம் நாளான இன்று வெகுவிமர்சையா நடைபெற்றது. விழாவினையொட்டி கோமதியம்பாள் காலையில் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு கோவிலில் இருந்து எழுந்தருளி தெற்குரதவீதியில் உள்ள தபசு மண்டபத்தில் எழுந்தருளி அங்கு தவக் கோலத்தில் வீற்றிருந்தார் . பின்னர் மாலை சரியாக 6 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி சங்கரநாராயணர் எழுந்தருளி தெற்குரதவீதி தபசு மண்டபத்தில் வீற்றிருக்கும் அப்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. அப்போது சுவாமி அம்பாளுக்கு மாலை மாற்றும் வைபவம் , சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவகோஷம் முழங்க தரிசனம் செய்தனர் .
         

மேலும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலில் குவிந்துள்ளதைத் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் .Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.