ETV Bharat / state

நீட் ஆள்மாறாட்ட வழக்கு - ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

author img

By

Published : Oct 10, 2019, 10:22 PM IST

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் பிரவின், ராகுல் மற்றும் அவர்களது தந்தையரின் ஜாமின் மனு மீதான விசாரணையின்போது சிபிசிஐடி விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாததால் வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.

neet-exam-forgery

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சில மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பிரவின், ராகுல், அவர்களது தந்தை சரவணன், டேவிஸ் ஆகியோரை கைது செய்து விசாரணைக்காக கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தேனியில் உள்ள அலுவலகத்திற்கு சிபிசிஐடி காவலர்கள் அழைத்து வந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், மாணவர் பிரவின், ராகுல் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியானது.

இதனையடுத்து மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையர்கள் சரவணன், டேவிஸ் ஆகிய நான்கு பேரும் அடுத்தடுத்த நாட்களில் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நான்கு பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து நான்கு பேர் சார்பில் தேனி நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு சென்னை வழக்கறிஞர் விஜயகுமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது சிபிசிஐடி சார்பில் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான ஆய்வாளர் சித்ராதேவி நேரில் ஆஜராகாததால், வழக்கை நாளை ஒத்தி வைப்பதாக நீதிபதி பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இதுகுறித்து வழக்கறிஞர் விஜயகுமார் கூறுகையில், ஜாமீன் வழங்கப்படக் கூடாது என்ற நோக்கத்திலேயே சிபிசிஐடி காவலர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: அதிமுகவை பின்னுக்குத் தள்ளிய திமுக... எதில் தெரியுமா?

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சில மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பிரவின், ராகுல், அவர்களது தந்தை சரவணன், டேவிஸ் ஆகியோரை கைது செய்து விசாரணைக்காக கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தேனியில் உள்ள அலுவலகத்திற்கு சிபிசிஐடி காவலர்கள் அழைத்து வந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், மாணவர் பிரவின், ராகுல் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியானது.

இதனையடுத்து மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையர்கள் சரவணன், டேவிஸ் ஆகிய நான்கு பேரும் அடுத்தடுத்த நாட்களில் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நான்கு பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து நான்கு பேர் சார்பில் தேனி நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு சென்னை வழக்கறிஞர் விஜயகுமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது சிபிசிஐடி சார்பில் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான ஆய்வாளர் சித்ராதேவி நேரில் ஆஜராகாததால், வழக்கை நாளை ஒத்தி வைப்பதாக நீதிபதி பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இதுகுறித்து வழக்கறிஞர் விஜயகுமார் கூறுகையில், ஜாமீன் வழங்கப்படக் கூடாது என்ற நோக்கத்திலேயே சிபிசிஐடி காவலர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: அதிமுகவை பின்னுக்குத் தள்ளிய திமுக... எதில் தெரியுமா?

Intro: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் பிரவின், ராகுல் மற்றும் அவர்களது தந்தையரின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு.
சிபிசிஐடி விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகததால் தள்ளிவைப்பு.



Body: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தில் மேலும் 4மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பிரவின், ராகுல் இவர்களது தந்தை சரவணன், டேவிஸ் மற்றும் மாணவி அபிராமி அவரது தந்தை ஆகியோரை விசாரணைக்காக கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தேனியில் உள்ள அலுவலகத்திற்கு சிபிசிஐடி போலீசார் அழைத்து வந்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவகல்லூரியில் பயின்று வந்த மாணவர் பிரவின், பாலாஜி மருத்துவ கல்லூரி மாணவர் ராகுல் ஆகியோர் ஆள்மாறாட்டம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்கள் அவர்களது தந்தையர்கள் சரவணன், டேவிஸ் ஆகிய நால்வரும் அடுத்தடுத்த நாட்களில் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு நால்வரையும் 15நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து நால்வரின் சார்பில் தேனி நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு சென்னை வழக்கறிஞர் விஜயகுமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் சிபிசிஐடி சார்பில் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான ஆய்வாளர் சித்ராதேவி நேரில் ஆஜராகததால், வழக்கை நாளை ஒத்தி வைப்பதாக நீதிபதி பன்னீர்செல்வம் அறிவித்தார்.





Conclusion: இது குறித்து மாணவர்களின் வழக்கறிஞர் விஜயகுமார் கூறுகையில், சிபிசிஐடி போலீசார் ஜாமின் வழங்கப்படக் கூடாது என்ற நோக்கத்திலே விசாரணைக்கு ஆஜராகமல் அழைக்கழிப்பதாக குற்றம் சாட்டினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.