ETV Bharat / state

காரில் கடத்திய புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது!

author img

By

Published : Jul 20, 2019, 11:15 PM IST

தேனி: பெங்களுரில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திக் கொண்டு வரப்பட்ட இரண்டு லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை காவல் துறையினர் கைப்பற்றினர்.

pan masala

தேனி நகர் காவல்துறையினர் பெரியகுளம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக கேரள பதிவு எண் கொண்ட வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்ததது. அதை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட முயன்றபோது, ஒட்டுநர் காரை நிறுத்தமல் சென்றார். பின் அந்தக் காரை காவல்துறையினர் விரட்டிப் பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது காரின் பின்பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா இருந்ததை கண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து காரின் ஓட்டுநர் ஜலாலுதீன், காரில் பயணித்த ராஜா முகமது ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பெங்களுரில் இருந்து கேரளாவிற்கு தேனி வழியாக குட்கா பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் வாகனத்தில் இருந்த குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்தப் புகையிலைப் பொருட்களின் மதிப்பு சுமார் 2 லட்சம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

இது குறித்து வழக்குப் பதிவு செய்த தேனி நகர் காவல்துறையினர், இந்தக் கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி நகர் காவல்துறையினர் பெரியகுளம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக கேரள பதிவு எண் கொண்ட வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்ததது. அதை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட முயன்றபோது, ஒட்டுநர் காரை நிறுத்தமல் சென்றார். பின் அந்தக் காரை காவல்துறையினர் விரட்டிப் பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது காரின் பின்பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா இருந்ததை கண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து காரின் ஓட்டுநர் ஜலாலுதீன், காரில் பயணித்த ராஜா முகமது ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பெங்களுரில் இருந்து கேரளாவிற்கு தேனி வழியாக குட்கா பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் வாகனத்தில் இருந்த குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்தப் புகையிலைப் பொருட்களின் மதிப்பு சுமார் 2 லட்சம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

இது குறித்து வழக்குப் பதிவு செய்த தேனி நகர் காவல்துறையினர், இந்தக் கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro: பெங்களுரில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்தி வரப்பட்ட 2லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் தேனியில் பறிமுதல். கம்பத்தை சேர்ந்த இருவர் கைது. காவல்துறையினர் விசாரணை.
Body: தேனி நகர் காவல்துறையினர் இன்று மாலை பெரியகுளம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கேரள பதிவு என் கொண்ட வாகனம் ஒன்று காவல் துறையினரை கண்டு தப்பிப்பதற்கு முயற்சி செய்தது. சந்தேகப்படும்படியான அந்த வாகனத்தை போலீசார் விரட்டிப் பிடித்து சோதனை மேற்கொண்டதில் காரின் பின்பகுதி முழுவதுமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா போதை பாக்குகள் இருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்த கம்பத்தைச் சேர்ந்த ராஜாமுகமது மற்றும் ஓட்டுனர் ஜலாலுதீன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்தனர்.
அதில் பெங்களுரில் இருந்து கேரளாவிற்கு தேனி வழியாக குட்கா பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் வாகனத்தில் இருந்த குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு சுமார் 2 லட்சம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Conclusion: மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த தேனி நகர் காவல்துறையினர் இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.