ETV Bharat / state

தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் ஓபிஎஸ் என்று ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி கிழிப்பு! - எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர், மக்களின் முதலமைச்சர் ஓபிஎஸ் என்று ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் ஓபிஎஸ்
தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் ஓபிஎஸ்
author img

By

Published : Aug 15, 2020, 3:53 PM IST

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் அவரது ஆதரவாளர்களால் "தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் ஐயா ஓபிஎஸ்" என்று அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் இன்று (ஆகஸ்ட் 15) ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு அரசியலில் இந்த சுவரொட்டிகள் பெரும் சுனாமியையே கிளப்பியது. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர், மக்களின் முதலமைச்சர் ஓபிஎஸ் என்று ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவாதம் தற்போதே எழுந்துவிட்டது. அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சில அமைச்சர்களும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சில அமைச்சர்களும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இதன் காரணமாக அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.

ஓபிஎஸ் சுவரொட்டி கிழிப்பு

இதனால் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கூடி சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தலைமைக் கழகம் முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அதிமுக கட்சியில் அரியணைக்கு போட்டியிடுவது யார்? முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகுமா?

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் அவரது ஆதரவாளர்களால் "தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் ஐயா ஓபிஎஸ்" என்று அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் இன்று (ஆகஸ்ட் 15) ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு அரசியலில் இந்த சுவரொட்டிகள் பெரும் சுனாமியையே கிளப்பியது. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர், மக்களின் முதலமைச்சர் ஓபிஎஸ் என்று ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவாதம் தற்போதே எழுந்துவிட்டது. அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சில அமைச்சர்களும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சில அமைச்சர்களும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இதன் காரணமாக அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.

ஓபிஎஸ் சுவரொட்டி கிழிப்பு

இதனால் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கூடி சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தலைமைக் கழகம் முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அதிமுக கட்சியில் அரியணைக்கு போட்டியிடுவது யார்? முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.