ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: மேலும் ஒரு இடைத்தரகர் கைது

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக இடைத்தரகர் ஒருவரைக் கைது செய்து தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

author img

By

Published : Feb 8, 2020, 3:53 PM IST

theni
theni

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் உதித்சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதுவரை ஆறு மாணவர்கள், ஆறு பெற்றோர், ஒரு இடைத்தரகரென மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிபிசிஐடி அலுவலகம்

இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர் பவித்ரன், இடைத்தரகர் ஆறுமுகம் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மாணவன் பவித்ரனுக்கு ஆள்மாறாட்டத்தில் மேலும் ஒரு இடைத்தரகராக செயல்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரை சிபிசிஐடியினர் இன்று கைது செய்துள்ளனர்.

தற்போது அவர், தேனி சமதர்மபுரம் சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இவருக்கும் முக்கிய இடைத்தரகர் ரசீத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக சிபிசிஐடியினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணை முடிவில் முக்கிய இடைத்தரகர் ரசீத் குறித்த தகவல்கள் கிடைக்கும் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: 'நீட் தேர்வால் கஷ்டப்படுவது நாங்கள்தான்' - அமைச்சர் செங்கோட்டையன் காட்டம்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் உதித்சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதுவரை ஆறு மாணவர்கள், ஆறு பெற்றோர், ஒரு இடைத்தரகரென மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிபிசிஐடி அலுவலகம்

இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர் பவித்ரன், இடைத்தரகர் ஆறுமுகம் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மாணவன் பவித்ரனுக்கு ஆள்மாறாட்டத்தில் மேலும் ஒரு இடைத்தரகராக செயல்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரை சிபிசிஐடியினர் இன்று கைது செய்துள்ளனர்.

தற்போது அவர், தேனி சமதர்மபுரம் சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இவருக்கும் முக்கிய இடைத்தரகர் ரசீத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக சிபிசிஐடியினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணை முடிவில் முக்கிய இடைத்தரகர் ரசீத் குறித்த தகவல்கள் கிடைக்கும் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: 'நீட் தேர்வால் கஷ்டப்படுவது நாங்கள்தான்' - அமைச்சர் செங்கோட்டையன் காட்டம்

Intro: நீட் தேர்வு ஆள்மாறாட்ட தொடர்பாக மேலும் ஒரு இடைத்தரகர் கைது. தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை.Body: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் என இருவர் முதன் முதலாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அடுத்தடுத்து சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதுவரை 6 மாணவர்கள், 6 மாணவர்களின் பெற்றோர் ஒரு இடைத்தரகர் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த மாணவர் பவித்ரன் மற்றும் இடைத்தரகர் ஆறுமுகம் என இருவர் மட்டும் சிறையில் உள்ளனர், மற்றவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட மாணவர் பவித்ரனுக்கு நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்திற்கு இடைத்தரகராக செயல்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரைச் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போது தேனி சமதர்மபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக ஆறுமுகம் என்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது இடைத்தரகராக மனோகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கும் முக்கிய இடைத்தரகர் ரசீத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.
Conclusion: விசாரணை முடிவில் முக்கிய இடைத்தரகர் ரசீத் குறித்த தகவல்கள் மற்றும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மேலும் சில மாணவர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கும் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.