ETV Bharat / state

விவசாயிகள் வேன் விபத்து - 3 பேர் பலி; 9 பேர் காயம்

author img

By

Published : Sep 27, 2019, 8:35 PM IST

தேனி: பெரியகுளம் அருகே தோட்ட வேலைக்கு சென்ற விவசாய தொழிலாளர்களின் வாகனம் கவிழ்ந்ததில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

9 நபர்கள் படுகாயம்

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி அருகே கும்பக்கரை பகுதியில் உள்ள மாந்தோட்ட வேலைக்காக உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு விவசாய கூலி தொழிலாளர்கள் வந்த வேன், தர்மலிங்கபுரம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முத்துப்பாண்டி (27), மணிகண்டன் (27) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் வேனில் பயணம் செய்த பத்து பேர் படுகாயமடைந்தனர்.

மீட்கப்பட்ட அவர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அய்யர் (41) என்பவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேலும் நான்கு பேர் இருந்ததால், அவர்கள் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த தேவதானப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

பெரியகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்கள்

மேலும் படிக்க: மாருதி வேனில் பற்றி எறிந்த தீ - பொதுமக்கள் பீதி

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி அருகே கும்பக்கரை பகுதியில் உள்ள மாந்தோட்ட வேலைக்காக உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு விவசாய கூலி தொழிலாளர்கள் வந்த வேன், தர்மலிங்கபுரம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முத்துப்பாண்டி (27), மணிகண்டன் (27) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் வேனில் பயணம் செய்த பத்து பேர் படுகாயமடைந்தனர்.

மீட்கப்பட்ட அவர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அய்யர் (41) என்பவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேலும் நான்கு பேர் இருந்ததால், அவர்கள் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த தேவதானப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

பெரியகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்கள்

மேலும் படிக்க: மாருதி வேனில் பற்றி எறிந்த தீ - பொதுமக்கள் பீதி

Intro: பெரியகுளம் அருகே தோட்ட வேலைக்கு சென்ற விவசாய கூலியாட்கள் வாகனம் கவிழ்ந்து விபத்து. 3பேர் பலி, 9பேர் படுகாயம், மருத்துவமனையில் சிகிச்சை.
Body: தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை பகுதியிலிருந்து கும்பக்கரை பகுதியில் உள்ள மாந்தோட்ட வேலைக்காக உர மூடைகள் மற்றும் கூலி ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம் தர்மலிங்கபுரம் அருகே வந்தபோது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முத்துப்பாண்டி(27) மற்றும் மணிகண்டன்(27 ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் வேனில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் மீட்கப்பட்டு பெரியகுளம் அரசு தலைமை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அய்யர்(41) என்பவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேலும் 4பேர் வரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தேவதானப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Conclusion: இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.