தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி அருகே கும்பக்கரை பகுதியில் உள்ள மாந்தோட்ட வேலைக்காக உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு விவசாய கூலி தொழிலாளர்கள் வந்த வேன், தர்மலிங்கபுரம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முத்துப்பாண்டி (27), மணிகண்டன் (27) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் வேனில் பயணம் செய்த பத்து பேர் படுகாயமடைந்தனர்.
மீட்கப்பட்ட அவர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அய்யர் (41) என்பவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேலும் நான்கு பேர் இருந்ததால், அவர்கள் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த தேவதானப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் படிக்க: மாருதி வேனில் பற்றி எறிந்த தீ - பொதுமக்கள் பீதி