தேனி மாவட்டம் பெரியகுளம் வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரியான பிரகாஷுக்கும், அதே பகுதியை சேர்ந்த பாரதி என்கிற பட்டதாரி பெண்ணுக்கும் ஏற்கனவே பெரியோர்களால் ஆடம்பரமாக திருமணம் நடத்த முடிவெடுத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இவர்களது திருமணம், நேற்று பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள பகவதியம்மன் கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்றது. திருமணத்தில் இரு வீட்டார் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும் இருவரும் முகக்கவசம் அணிந்து தாலி கட்டி, மாலை மாற்றிக் கொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் தொற்று காரணமாக கபசுரக் குடிநீருடன் நடந்த இஸ்லாமிய திருமணம்