ETV Bharat / state

'மாஃபா பாண்டியராஜன் ஒரு புள்ளி ராஜா' - ஓபிஎஸ் நக்கல்! - Mafa Pandiarajan

தேனி: தேனியில் நடைபெற்ற பள்ளி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை 'புள்ளிராஜா' என்று ஓபிஎஸ் நக்கலடித்ததால் சிரிப்பலை எழுந்தது.

நிகழ்வில் கலந்து கொண்ட பன்னீர் செல்வம் மற்றும் மாஃபா பாண்டியராஜன்
author img

By

Published : Feb 17, 2019, 7:50 PM IST

OPS And PANDIYARAJAN
நிகழ்வில் கலந்து கொண்ட பன்னீர் செல்வம் மற்றும் மாஃபா பாண்டியராஜன்
தேனியில் நாடார் சரஸ்வதி தொடக்க பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி கடந்த 3 தினங்களாக நடைபெற்று வருகிறது. இறுதி நாளான இன்றைய நிகழ்வில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
undefined

இந்த விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "காமராஜரின் திட்டங்களை சாதனையாக மாற்றிக் காட்டியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்தியாவிலேயே மாணவர் சேர்க்கை மற்றும் தேர்ச்சி சதவிகிதத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் நுணுக்கங்களை அறிந்து பணியாற்றி வருகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் ஆட்சி மொழி துறை அமைச்சராக இருக்கும் மாஃபா பாண்டியராஜன், இதற்கு முன் இதே துறையில் இருந்த அமைச்சர்களில் சிறந்த அமைச்சர்.

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு 20 கோடி நிதிக்காக தமிழக அரசு சார்பாக 10 கோடியும், மீதமுள்ள 10 கோடி ரூபாய் பாண்டியராஜனின் முயற்சியாலேயே கிடைக்கப் பெற்றது. அந்த அளவு சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

அவர் புள்ளி விபரங்களை கூறுவதில் புலி. அதனால் வைகைச்செல்வன் அவருக்கு புள்ளி ராஜா என்று பெயரே வைத்துள்ளார்", என்று நக்கலுடன் பேசி முடித்தார்.


ஓபிஎஸின் இந்த கலகலப்பான பேச்சால் அங்கிருந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரிடையே சிரிப்பலை எழுந்தது.

OPS And PANDIYARAJAN
நிகழ்வில் கலந்து கொண்ட பன்னீர் செல்வம் மற்றும் மாஃபா பாண்டியராஜன்
தேனியில் நாடார் சரஸ்வதி தொடக்க பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி கடந்த 3 தினங்களாக நடைபெற்று வருகிறது. இறுதி நாளான இன்றைய நிகழ்வில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
undefined

இந்த விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "காமராஜரின் திட்டங்களை சாதனையாக மாற்றிக் காட்டியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்தியாவிலேயே மாணவர் சேர்க்கை மற்றும் தேர்ச்சி சதவிகிதத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் நுணுக்கங்களை அறிந்து பணியாற்றி வருகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் ஆட்சி மொழி துறை அமைச்சராக இருக்கும் மாஃபா பாண்டியராஜன், இதற்கு முன் இதே துறையில் இருந்த அமைச்சர்களில் சிறந்த அமைச்சர்.

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு 20 கோடி நிதிக்காக தமிழக அரசு சார்பாக 10 கோடியும், மீதமுள்ள 10 கோடி ரூபாய் பாண்டியராஜனின் முயற்சியாலேயே கிடைக்கப் பெற்றது. அந்த அளவு சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

அவர் புள்ளி விபரங்களை கூறுவதில் புலி. அதனால் வைகைச்செல்வன் அவருக்கு புள்ளி ராஜா என்று பெயரே வைத்துள்ளார்", என்று நக்கலுடன் பேசி முடித்தார்.


ஓபிஎஸின் இந்த கலகலப்பான பேச்சால் அங்கிருந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரிடையே சிரிப்பலை எழுந்தது.

Intro: புள்ளிராஜா என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை நக்கலடித்த துணை முதல்வர், தேனியில் நடைபெற்ற பள்ளி நூற்றாண்டு விழாவில் ஓபிஎஸ் கலகல பேச்சு.


Body: தேனியில் உள்ள என் எஸ் தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி கடந்த 3 தினங்களாக நடைபெற்று வருகிறது. இறுதி நாளான இன்றைய நிகழ்வில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்கள்.
பள்ளியின் நூற்றாண்டு விழா கட்டிடங்கள், புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளை திறந்து வைத்தும், நூற்றாண்டு மலரை வெளியிட்டு தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் சிறப்புரையாற்றினார். முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், உலகப்புகழ் பெற்ற சிக்கிம் நகரை போன்று, தென்மேற்கு பருவ காற்றின் அழகையும், மலைகளின் வனப்பையும் கண்டு ரசிக்கும் வகையில், தேனி மாவட்டத்தை eco-tourism ஆக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்று துணை முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் நுணுக்கங்களை அறிந்து பணியாற்றி வருகிறார். இதுவரை தமிழ் வளர்ச்சித் துறையில் பணியாற்றிய அமைச்சர்களில் பாண்டியராஜன் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு 20 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு சார்பாக 10 கோடியும், மீதமுள்ள 10 கோடி ரூபாய் பாண்டியராஜனின் முயற்சியாலேயே கிடைக்கப்பட்டது. அந்த அளவு சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
அவரை புள்ளிவிவரப்புலி என்று மேடையில் ஆசிரியர் ஒருவர் கூறினார், ஆனால் அவரை வைகைசெல்வன் போன்றோர் புள்ளிவிவரப்புலி என்று அழைக்க மாட்டார்கள், புள்ளி ராஜா என்றுதான் அழைப்பார்கள் என்று நக்கலுடன் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை கூறினார். இதனால் அங்கிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், ,பெற்றோர்கள் எனஅனைவரும் சிரித்தனர்.


Conclusion: இந்த நிகழ்ச்சியில், தேனி எம்.பி.பார்த்திபன், ஓபிஏஸ் மகன் ரவீந்திர நாத் குமார் மற்றும் என்.எஸ்.கல்வி குழுமங்களை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.