ETV Bharat / state

தேனி அருகே சொத்துத்தகராறில் கத்தியால் குத்தி தொழிலாளி படுகொலை!

தேனி அருகே சொத்து பிரச்னையில் தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த தம்பதியினரை போலீசார் கைது செய்தனர்.

author img

By

Published : Oct 28, 2022, 5:34 PM IST

சொத்து தகராறில் கத்தியால் குத்தி தொழிலாளி படுகொலை!!
சொத்து தகராறில் கத்தியால் குத்தி தொழிலாளி படுகொலை!!

தேனி அருகே சரத்துப்பட்டியைச்சேர்ந்தவர் ஜெயபால் (54), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தங்கமலை(48). ஜெயபால் தனது மனைவிக்குச்சொந்தமாக சங்ககோணாம்பட்டியில் இருந்த 2 சென்ட் நிலத்தை தேனியைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தார்.

நேற்று அந்த நிலத்தை அளவீடு செய்து கற்கள் ஊன்றுவதற்காக ஜெயபால் மற்றும் சிலர் சங்ககோணாம்பட்டிக்கு வந்தனர். அப்போது தங்கமலையின் தம்பி ஜெயராம், தனது மனைவி முத்துபிரியாவுடன் அங்கு வந்தார். தனது அக்காவின் நிலத்தில் தனக்கும் பங்கு உள்ளதாகக்கூறி அவரும், அவருடைய மனைவியும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஜெயராம் தனது அக்கா கணவர் ஜெயபாலின் முகத்தில் மஞ்சள் பொடியைத்தூவினார். அவர் சுதாரிப்பதற்குள் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அவருடைய மார்புப்பகுதியில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த ஜெயபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இறந்தவரின் உடலை மீட்டுப் பிரேதப்பரிசோதனைக்காக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராம், முத்துபிரியா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான ஜெயராம் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரம்: தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தேனி அருகே சரத்துப்பட்டியைச்சேர்ந்தவர் ஜெயபால் (54), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தங்கமலை(48). ஜெயபால் தனது மனைவிக்குச்சொந்தமாக சங்ககோணாம்பட்டியில் இருந்த 2 சென்ட் நிலத்தை தேனியைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தார்.

நேற்று அந்த நிலத்தை அளவீடு செய்து கற்கள் ஊன்றுவதற்காக ஜெயபால் மற்றும் சிலர் சங்ககோணாம்பட்டிக்கு வந்தனர். அப்போது தங்கமலையின் தம்பி ஜெயராம், தனது மனைவி முத்துபிரியாவுடன் அங்கு வந்தார். தனது அக்காவின் நிலத்தில் தனக்கும் பங்கு உள்ளதாகக்கூறி அவரும், அவருடைய மனைவியும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஜெயராம் தனது அக்கா கணவர் ஜெயபாலின் முகத்தில் மஞ்சள் பொடியைத்தூவினார். அவர் சுதாரிப்பதற்குள் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அவருடைய மார்புப்பகுதியில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த ஜெயபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இறந்தவரின் உடலை மீட்டுப் பிரேதப்பரிசோதனைக்காக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராம், முத்துபிரியா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான ஜெயராம் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரம்: தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.