ETV Bharat / state

அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய அரசு அலுவலர்கள்

author img

By

Published : Apr 26, 2020, 4:54 PM IST

தேனி : திண்டுக்கல் மண்டலப் போக்குவரத்து அலுவலர்கள் சார்பாக தேனி மாவட்ட போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய அரசு அலுவலர்கள்
அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய அரசு அலுவலர்கள்

கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் தொழிலாளர்கள் எனப் பலரும் வருமானமின்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் தத்தமது உதவிகளை இயன்ற அளவில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திண்டுக்கல் மண்டலப் போக்குவரத்து அலுவலர்களின் சார்பாக தேனி மாவட்டத்தில், பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், பேருந்து சுத்தம் செய்பவர்கள், டிக்கெட் கேன்வசர்கள் என மொத்தம் 90 நபர்களுக்கு, 10 கிலோ அரிசி, காய்கறி என்பன போன்ற பொருட்களை மண்டல பொது மேலாளர் கணேசன் வழங்கினார்.

தொடர்ந்து கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக மருத்துவப் பணியாளர்களுக்காக இயக்கப்படும் 12 பேருந்தின் ஓட்டுனர்கள், கிளை மேலாளர்களுக்கு, பொது மேலாளர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

மேலும் ஒவ்வொரு நபரும் சமூக விலகலை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும், அடிக்கடி கைகளை சோப்பினால் சுத்தம் செய்தும், தனித்திருந்தும் கரோனா பரவலைத் தடுத்திட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.


இதையும் படிங்க: வீடு தேடி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஊராட்சித் தலைவர்

கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் தொழிலாளர்கள் எனப் பலரும் வருமானமின்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் தத்தமது உதவிகளை இயன்ற அளவில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திண்டுக்கல் மண்டலப் போக்குவரத்து அலுவலர்களின் சார்பாக தேனி மாவட்டத்தில், பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், பேருந்து சுத்தம் செய்பவர்கள், டிக்கெட் கேன்வசர்கள் என மொத்தம் 90 நபர்களுக்கு, 10 கிலோ அரிசி, காய்கறி என்பன போன்ற பொருட்களை மண்டல பொது மேலாளர் கணேசன் வழங்கினார்.

தொடர்ந்து கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக மருத்துவப் பணியாளர்களுக்காக இயக்கப்படும் 12 பேருந்தின் ஓட்டுனர்கள், கிளை மேலாளர்களுக்கு, பொது மேலாளர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

மேலும் ஒவ்வொரு நபரும் சமூக விலகலை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும், அடிக்கடி கைகளை சோப்பினால் சுத்தம் செய்தும், தனித்திருந்தும் கரோனா பரவலைத் தடுத்திட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.


இதையும் படிங்க: வீடு தேடி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஊராட்சித் தலைவர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.