ETV Bharat / state

தேனி அருகே கார் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

author img

By

Published : Dec 25, 2022, 4:37 PM IST

தேனி அருகே குமுளி மலைச்சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

கார் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு- முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
கார் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு- முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

சென்னை: இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தேனி அருகே ஆண்டிப்பட்டி வட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் உட்பட பத்து நபர்கள் சபரிமலை கோயிலுக்குச் சென்று திரும்புகையில், அவர்கள் வந்த வாகனம் நேற்று இரவு உத்தமபாளையம் வட்டம், குமுளி மலைப்பாதையில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இச்செய்தியை அறிந்தவுடன், தேனி மாவட்ட பொறுப்பு அமைச்சரான மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமியை உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, விபத்துக்குள்ளானவர்களுக்கு உரிய உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினேன்.

இந்த விபத்தில் நாகராஜ் (வயது 50), முனியாண்டி என்ற சாக்கு கடை முனியாண்டி, சிவக்குமார் (வயது 41), வினோத்குமார் (வயது 43), கண்ணுச்சாமி (வயது 65), தேவதாஸ் (வயது 55), கலைச்செல்வன் (வயது 35), மற்றும் கோபாலகிருஷ்ணன் (வயது 48) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் காயமுற்று தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் 2 நபர்களுக்கு, சிறப்பு சிகிச்சை அளித்திட உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்த 2 நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:CCTV: பைக் ஹெல்மெட்டை லாவகமாகத் திருடும் ஆசாமியின் சிசிடிவி

சென்னை: இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தேனி அருகே ஆண்டிப்பட்டி வட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் உட்பட பத்து நபர்கள் சபரிமலை கோயிலுக்குச் சென்று திரும்புகையில், அவர்கள் வந்த வாகனம் நேற்று இரவு உத்தமபாளையம் வட்டம், குமுளி மலைப்பாதையில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இச்செய்தியை அறிந்தவுடன், தேனி மாவட்ட பொறுப்பு அமைச்சரான மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமியை உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, விபத்துக்குள்ளானவர்களுக்கு உரிய உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினேன்.

இந்த விபத்தில் நாகராஜ் (வயது 50), முனியாண்டி என்ற சாக்கு கடை முனியாண்டி, சிவக்குமார் (வயது 41), வினோத்குமார் (வயது 43), கண்ணுச்சாமி (வயது 65), தேவதாஸ் (வயது 55), கலைச்செல்வன் (வயது 35), மற்றும் கோபாலகிருஷ்ணன் (வயது 48) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் காயமுற்று தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் 2 நபர்களுக்கு, சிறப்பு சிகிச்சை அளித்திட உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்த 2 நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:CCTV: பைக் ஹெல்மெட்டை லாவகமாகத் திருடும் ஆசாமியின் சிசிடிவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.