ETV Bharat / state

கோயிலில் தகராறு - 5 பேருக்கு மண்டை உடைந்தது!

author img

By

Published : Oct 22, 2020, 11:36 PM IST

தேனி: ஆண்டிபட்டி அருகே கோயிலில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் ஐந்து பேருக்கு மண்டை உடைந்தது.

கோயிலில் தகராறு
கோயிலில் தகராறு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் அமைந்துள்ளது ஶ்ரீமுத்துமாரியம்மன் கோயில். குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இத்திருக்கோயிலில் காலப்போக்கில் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களும் வழிபடத் தொடங்கினர். இதனிடையே இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த கோயிலை கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்ட சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயிலில் திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடத்தப்படாமல் உள்ளன. இந்நிலையில் நவராத்திரி பண்டிகையையொட்டி தற்போது கோயில் நிர்வாகத்தினர் சார்பில் கொழு வைக்கப்பட்டு தினசரி வழிபாடு நடைபெற்று வருகிறது. இதனை நடத்தக் கூடாது என்று குறிப்பிட்ட சிலர் இன்று(அக்.22) கோயிலில் அமர்ந்து தர்ணா செய்தனர்.

கோயிலில் தகராறு

அவர்களுடன் மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த காவல் துறையினர் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதனால் இரண்டு தரப்பிலும் சுமார் ஐந்து பேருக்கு மண்டை உடைந்தது.

தற்போது காயமடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சம்பவ இடத்திற்கு ஆண்டிபட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தங்ககிருஷ்ணன் தலைமையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு அங்கிருந்தவர்களை கலைத்தனர். இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களும் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் அமைந்துள்ளது ஶ்ரீமுத்துமாரியம்மன் கோயில். குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இத்திருக்கோயிலில் காலப்போக்கில் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களும் வழிபடத் தொடங்கினர். இதனிடையே இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த கோயிலை கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்ட சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயிலில் திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடத்தப்படாமல் உள்ளன. இந்நிலையில் நவராத்திரி பண்டிகையையொட்டி தற்போது கோயில் நிர்வாகத்தினர் சார்பில் கொழு வைக்கப்பட்டு தினசரி வழிபாடு நடைபெற்று வருகிறது. இதனை நடத்தக் கூடாது என்று குறிப்பிட்ட சிலர் இன்று(அக்.22) கோயிலில் அமர்ந்து தர்ணா செய்தனர்.

கோயிலில் தகராறு

அவர்களுடன் மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த காவல் துறையினர் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதனால் இரண்டு தரப்பிலும் சுமார் ஐந்து பேருக்கு மண்டை உடைந்தது.

தற்போது காயமடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சம்பவ இடத்திற்கு ஆண்டிபட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தங்ககிருஷ்ணன் தலைமையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு அங்கிருந்தவர்களை கலைத்தனர். இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களும் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.