உலகத்தையே திக்குமுக்காட வைத்துள்ள கரோனா வைரஸ் நோய்த் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் நோய்த் தொற்றால் 2 ஆயிரத்து 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 56 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, இந்தக் கொடூர தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன.
![தூய்மை பணியாளர்களுக்கு 1000 வழங்கிய துணை முதலமைச்சர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tni-02-ops-given-medical-equipement-script-7204333_03042020153512_0304f_1585908312_665.jpg)
பேரிடராக அறிவிக்கப்பட்டு, கரோனாவைக் கட்டுப்படுத்த பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1கோடியை ரூபாயை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக அளித்தார்.
![வெண்டிலேட்டர்களை வழங்கிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tni-02-ops-given-medical-equipement-script-7204333_03042020153512_0304f_1585908312_5.jpg)
இந்நிலையில், எம்.பி நிதியிலிருந்து புதிதாக வாங்கப்பட்ட 8 வென்டிலேட்டர்களை தேனி அரசு மருத்துவக்கல்லூரிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். மேலும் தேனி மாவட்ட அதிமுக சார்பில் 4 ஆயிரத்து 386 தூய்மைக் காவலர்களின் பணியைப் பாராட்டி அவர்களுக்கு தலா 1000 ரூபாய் ரொக்கமாக வழங்கினார்.
இதையும் படிங்க: அகல்விளக்கை ஏற்றுவதற்கு அறிவியல் பூர்வமான காரணம் உண்டா பிரதமரே! - எம்.பி சுப்பராயன்