ETV Bharat / state

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி தேனியில் சைக்கிள் பேரணி

author img

By

Published : Dec 28, 2020, 6:12 PM IST

உடல் ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாப்பது தொடர்பாக சிவகங்கையைச் சேர்ந்த இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் சார்பில் இன்று தேனியில் சைக்கிள் பேரணி தொடங்கியது.

சைக்கிள் பேரணி
சைக்கிள் பேரணி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இழுப்பங்குடியில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில் எல்லைப் பாதுகாப்பு படைக்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் விதமாகவும், பொதுமக்கள் ஆரோக்கியமான உடல் கட்டமைப்பைப் பேணிக் காப்பதற்காகவும், பிட் இந்தியா திட்டத்தின் கீழ் சிவகங்கை இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் சார்பாக சைக்கிள் பேரணி தேனி மாவட்டத்தில் இன்று (டிச.28) தொடங்கியது.

தேனியில் சைக்கிள் பேரணி

அம்மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டையில் இந்தோ திபெத் படை பயிற்சி மையத்தின் டி.ஐ.ஜி ரன்பீர்சிங் இந்த பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மார்க்கையன்கோட்டையிலிருந்து தொடங்கிய இந்த பேரணி சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், குமுளி வழியாக கேரளா மாநிலம் பெரியாரில் வரும் 30ஆம் தேதி நிறைவடைகிறது. 143 கி.மீ தூரம் செல்லும் இந்த பேரணியில் இந்தோ திபெத் பயிற்சி மைய படைவீரர்கள் 15 பேர் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிங்க: உருமாறிய கரோனா! - மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இழுப்பங்குடியில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில் எல்லைப் பாதுகாப்பு படைக்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் விதமாகவும், பொதுமக்கள் ஆரோக்கியமான உடல் கட்டமைப்பைப் பேணிக் காப்பதற்காகவும், பிட் இந்தியா திட்டத்தின் கீழ் சிவகங்கை இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் சார்பாக சைக்கிள் பேரணி தேனி மாவட்டத்தில் இன்று (டிச.28) தொடங்கியது.

தேனியில் சைக்கிள் பேரணி

அம்மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டையில் இந்தோ திபெத் படை பயிற்சி மையத்தின் டி.ஐ.ஜி ரன்பீர்சிங் இந்த பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மார்க்கையன்கோட்டையிலிருந்து தொடங்கிய இந்த பேரணி சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், குமுளி வழியாக கேரளா மாநிலம் பெரியாரில் வரும் 30ஆம் தேதி நிறைவடைகிறது. 143 கி.மீ தூரம் செல்லும் இந்த பேரணியில் இந்தோ திபெத் பயிற்சி மைய படைவீரர்கள் 15 பேர் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிங்க: உருமாறிய கரோனா! - மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.