ETV Bharat / state

கரோனா பாதிப்பு - தேனியில் ஒரே நாளில் 3 பேர் உயிரழப்பு

author img

By

Published : Jul 7, 2020, 5:24 PM IST

தேனி: இன்று கரோனா நோய்த் தொற்றால் 3 பேர் உயிரிழந்ததையடுத்து அம்மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

தேனியில் கரோனாவால் ஒரே நாளில் 3 பேர் உயிரழப்பு
தேனியில் கரோனாவால் ஒரே நாளில் 3 பேர் உயிரழப்பு

தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நேற்று மாலை நிலவரப்படி மாவட்டத்தில் 1,128 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. 377 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 744 பேர் சிகிச்சையில் உள்ளனர். போடி, ஓடைப்பட்டி, லட்சுமிபுரம், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இன்று கம்பத்தைச் சேர்ந்த 59 வயது முதியவர், உத்தமபாளையத்தைச் சேர்ந்த 47 வயது பெண்மணி, கோம்பையைச் சேர்ந்த 56 வயது நபர் என 3 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நேற்று மாலை நிலவரப்படி மாவட்டத்தில் 1,128 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. 377 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 744 பேர் சிகிச்சையில் உள்ளனர். போடி, ஓடைப்பட்டி, லட்சுமிபுரம், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இன்று கம்பத்தைச் சேர்ந்த 59 வயது முதியவர், உத்தமபாளையத்தைச் சேர்ந்த 47 வயது பெண்மணி, கோம்பையைச் சேர்ந்த 56 வயது நபர் என 3 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் மேலும் 109 பேருக்கு கரோனா - ஆட்சியர் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.