ETV Bharat / state

காவிரி நடுவர் மன்றத்தை கலைப்பேன் எனக் கூறும் ராகுல் பிரதமரா..? - ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி

author img

By

Published : Apr 13, 2019, 9:43 PM IST

தேனி: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும், காவிரி நடுவர் மன்றத்தை கலைப்பேன் என்று கர்நாடகாவில் பேசி வரும் ராகுல்காந்தியைதான் இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று ஸ்டாலின் முன்மொழிகிறார் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தேனி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று தேனியில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். இதற்காக தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள கரிசல்பட்டி விளக்கு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

முன்னதாக கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுக தலைவர் ஸ்டாலினை தவிர, அவர்களின் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சியினர் யாரும் ராகுல் காந்தியை பிரதமர் என்று சொல்லவில்லை. உங்கள் கூட்டணி குழப்பத்தில் உள்ளது. ஒற்றுமை இல்லை.


கேரளாவில் காங்கிரஸை ஆதரிக்கிறீர்களா..? கம்யூனிஸ்டை ஆதரிக்கிறீர்களா..? என்றால் தெளிவான பதில் இல்லை. அவர்கள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர். மீண்டும் மத்தியில் மோடிதான் பிரதமராக வருவார்.

மோடி பரப்புரை கூட்டம்

உலக நாடுகளில் இந்திய நாட்டிற்கு பெருமை தேடித் தந்திருக்கிறார். எனவே மீண்டும் மோடி பிரதமராக வருவதற்கு நாம் பாடுபடவேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்றும், காவிரி நடுவர் மன்றத்தை கலைப்பேன் என்றும் கர்நாடகாவில் பேசியுள்ளார் ராகுல்காந்தி. இவரைத்தான் பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் முன்மொழிகிறார். காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டு விட்டால், தமிழகம் சுடுகாடாகிவிடும். அவர்கள் கட்சியின் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களை தோற்கடிக்க வேண்டும். கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம், என்றார்.

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று தேனியில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். இதற்காக தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள கரிசல்பட்டி விளக்கு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

முன்னதாக கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுக தலைவர் ஸ்டாலினை தவிர, அவர்களின் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சியினர் யாரும் ராகுல் காந்தியை பிரதமர் என்று சொல்லவில்லை. உங்கள் கூட்டணி குழப்பத்தில் உள்ளது. ஒற்றுமை இல்லை.


கேரளாவில் காங்கிரஸை ஆதரிக்கிறீர்களா..? கம்யூனிஸ்டை ஆதரிக்கிறீர்களா..? என்றால் தெளிவான பதில் இல்லை. அவர்கள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர். மீண்டும் மத்தியில் மோடிதான் பிரதமராக வருவார்.

மோடி பரப்புரை கூட்டம்

உலக நாடுகளில் இந்திய நாட்டிற்கு பெருமை தேடித் தந்திருக்கிறார். எனவே மீண்டும் மோடி பிரதமராக வருவதற்கு நாம் பாடுபடவேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்றும், காவிரி நடுவர் மன்றத்தை கலைப்பேன் என்றும் கர்நாடகாவில் பேசியுள்ளார் ராகுல்காந்தி. இவரைத்தான் பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் முன்மொழிகிறார். காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டு விட்டால், தமிழகம் சுடுகாடாகிவிடும். அவர்கள் கட்சியின் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களை தோற்கடிக்க வேண்டும். கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம், என்றார்.

Intro: "காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்", "காவிரி நடுவர் மன்றத்தை கலைப்பேன்" என்று கர்நாடகாவில் பேசி வாக்கு சேகரித்து வரும் ராகுல்காந்தியை தான் இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என ஸ்டாலின் முன்மொழிகிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேனியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேச்சு


Body: நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று தேனியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். இதற்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கரிசல்பட்டி விளக்கு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
முன்னதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் பேசுகையில், திமுக தலைவர் ஸ்டாலினை தவிர, அவர்களின் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சியினர் யாரும் ராகுல் காந்தியை பிரதமர் என்று சொல்லவில்லை. உங்கள் கூட்டணி குழப்பத்தில் உள்ளது, ஒற்றுமை இல்லை.
கேரளாவில் காங்கிரஸைஆதரிக்கிறீர்களா? கம்யூனிஸ்டு ஆதரிக்கிறீர்களா? சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர். மீண்டும் மத்தியில் மோடி தான் பிரதமராக வருவார். உலக நாடுகளில் இந்திய நாட்டிற்கு பெருமை தேடித் தந்திருக்கிறார். எனவே மீண்டும் மோடி பிரதமராக வருவதற்கு நாம் பாடுபடவேண்டும் என்று பேசினார் .
மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்றும், காவிரி நடுவர் மன்றத்தை கலைப்பேன் என்றும் கர்நாடகாவில் பேசியுள்ளார் ராகுல்காந்தி. இவரைத் தான் பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் முன்மொழிகிறார். காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டு விட்டால், தமிழகம் சுடுகாடாகிவிடும்.
அவர்கள் கட்சியின் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களை தோற்கடிக்க வேண்டும்.



Conclusion: கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம் என்று பேசினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.