ETV Bharat / state

தேனி அருகே 300 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்!

author img

By

Published : Oct 12, 2020, 3:03 AM IST

தேனி: போடி அருகே சட்டவிரோதமாக விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 300 கிலோ புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவரை கைது செய்தனர்.

300-kg-of-tobacco-seized-near-theni
300-kg-of-tobacco-seized-near-theni

தேனி மாவட்டம் போடி - தேவாரம் சாலையில் காவல்துறையினர் நேற்று (அக்.11) வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கினங்க வந்துகொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் ஆட்டோவில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவில் வந்த சங்கராபுரம் விக்னேஷ், தேவாரம் இளையராஜா ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் 300 கிலோ அளவிலான புகையிலைப் பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கொள்ளிடம் ஆற்றில் மிதந்த உடல் - காவல்துறை விசாரணை!

தேனி மாவட்டம் போடி - தேவாரம் சாலையில் காவல்துறையினர் நேற்று (அக்.11) வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கினங்க வந்துகொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் ஆட்டோவில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவில் வந்த சங்கராபுரம் விக்னேஷ், தேவாரம் இளையராஜா ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் 300 கிலோ அளவிலான புகையிலைப் பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கொள்ளிடம் ஆற்றில் மிதந்த உடல் - காவல்துறை விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.