ETV Bharat / state

நீலகிரியில் மர்மமான முறையில் உயிரிழந்த பிராணிகள்!

author img

By

Published : May 7, 2020, 1:15 PM IST

நீலகிரி: குன்னூர் பகுதியில் திடீரென்று 20 பிராணிகள் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்த பிராணிகள்
மர்மமான முறையில் உயிரிழந்த பிராணிகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அமைந்துள்ளது வள்ளுவர் நகர் கிராமம். இப்பகுதியைச் சுற்றி வாசுகி நகர், வசம் பள்ளம், ஒட்டுப்பட்டரை ஆகிய கிராமங்கள் உள்ளன.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள நாய், பூனை, காகம், காட்டுப் பன்றிகள் என மொத்தம் 20 பிராணிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. திடீரென்று பிராணிகள் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்த பிராணிகள்

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கால்நடைத் துறையினர், வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்று அலுவலர்கள் உயிரிழந்த பிராணிகளை மீட்டு உடற்கூறாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: டெங்கு பரவ காரணமாக இருந்த தடை செய்யப்பட்ட 7 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அமைந்துள்ளது வள்ளுவர் நகர் கிராமம். இப்பகுதியைச் சுற்றி வாசுகி நகர், வசம் பள்ளம், ஒட்டுப்பட்டரை ஆகிய கிராமங்கள் உள்ளன.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள நாய், பூனை, காகம், காட்டுப் பன்றிகள் என மொத்தம் 20 பிராணிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. திடீரென்று பிராணிகள் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்த பிராணிகள்

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கால்நடைத் துறையினர், வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்று அலுவலர்கள் உயிரிழந்த பிராணிகளை மீட்டு உடற்கூறாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: டெங்கு பரவ காரணமாக இருந்த தடை செய்யப்பட்ட 7 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.