ETV Bharat / state

நிலச்சரிவில் உயிரிழந்தவரின் உடல் 12 நாட்களுக்கு பிறகு மீட்பு!

author img

By

Published : Aug 20, 2019, 5:00 PM IST

நீலகிரி : கூடலூர் ஓவேலி சீபுரம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சையனுதீன் என்பவரது உடல் 12 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவரின் உடல் மீட்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 5ஆம் தேதி முதல் ஒரு வார காலமாக வரலாறு காணாத கனமழை பெய்துவந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டதில் மொத்தம் ஆறு பேர் உயிரிழந்தனர்.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவரின் உடல் மீட்பு

அந்தவகையில், கூடலூர் ஓவேலி பகுதியில் சீபுரம் என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சையனுதீன் என்பவர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் உதவியுடன் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேடிவந்தனர்,

இந்நிலையில் 12 நாட்களுப் பிறகு அவரது உடல் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன் பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 5ஆம் தேதி முதல் ஒரு வார காலமாக வரலாறு காணாத கனமழை பெய்துவந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டதில் மொத்தம் ஆறு பேர் உயிரிழந்தனர்.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவரின் உடல் மீட்பு

அந்தவகையில், கூடலூர் ஓவேலி பகுதியில் சீபுரம் என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சையனுதீன் என்பவர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் உதவியுடன் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேடிவந்தனர்,

இந்நிலையில் 12 நாட்களுப் பிறகு அவரது உடல் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன் பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

Intro:OotyBody:கூடலூர் ஓவேலி சீபுரம் பகுதியில் நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்த செய்யனுதீன் என்பவரின் உடல் 12 நாட்களுக்கு பிறகு மீட்பு. நீலகிரியில் மழை வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு .

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 5-ம் தேதி முதல் ஒரு காலமாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வெள்ள பெருக்கு ஏற்பட்டது. நிலச்சரிவு மற்றும் காற்றாற்று வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிர் இழந்தனர். கூடலூர் ஓவேலி பகுதியில் சீபுரம் என்ற பகுதியில் ஏற்பட நிலச்சரிவில்
சையனுதீன் என்பவர் அடித்துச் செல்லபட்டு மண்ணில் புதைந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் உதவியுடன் நூற்றுகணக்கான கிராம மக்கள் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடந்த 12 நாட்களாக தேடி வந்த நிலையில் அவரது உடல் மீட்கபட்டது. கூடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யபட்டு அவர்களின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு மற்றும் காற்றாற்று வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.