ETV Bharat / state

காவல் துறையில் சேர்வதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

author img

By

Published : Jun 8, 2020, 9:04 PM IST

நீலகிரி: குன்னூரில் காவல் துறை சார்பில் இளைஞர் மற்றும் மகளிர் காவல் துறை பயிற்சி பெறுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Police awareness programme
Police awareness programme

நீலகிரி மாவட்ட காவல் துறையில், பெரும்பாலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்களே பணியாற்றுகின்றனர். இவர்கள் இங்கு பணிக்கு வந்தாலும் விரைவில் பணி மாற்றம் பெற்று சென்று விடுகின்றனர்.

எனவே, உள்ளூர் இளைஞர்களும் பெண்களும் காவலர் பணியில் சேர்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி குன்னூர் ஜான்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. குன்னூர் டிஎஸ்பி குமார் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள் குறித்து விளக்கினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குன்னூர் அரசு மேல்நிலைபள்ளி உடற்கல்வி ஆசிரியர் கனேசன், காவல் துறையில் சேர விரும்புபவர்களுக்கு உடற்பயிற்சியின் அவசியம் என்றும், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் விளக்கினார்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 170க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ’ஒட்டுமொத்த சென்னையிலும் கரோனா கிடையாது’

நீலகிரி மாவட்ட காவல் துறையில், பெரும்பாலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்களே பணியாற்றுகின்றனர். இவர்கள் இங்கு பணிக்கு வந்தாலும் விரைவில் பணி மாற்றம் பெற்று சென்று விடுகின்றனர்.

எனவே, உள்ளூர் இளைஞர்களும் பெண்களும் காவலர் பணியில் சேர்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி குன்னூர் ஜான்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. குன்னூர் டிஎஸ்பி குமார் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள் குறித்து விளக்கினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குன்னூர் அரசு மேல்நிலைபள்ளி உடற்கல்வி ஆசிரியர் கனேசன், காவல் துறையில் சேர விரும்புபவர்களுக்கு உடற்பயிற்சியின் அவசியம் என்றும், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் விளக்கினார்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 170க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ’ஒட்டுமொத்த சென்னையிலும் கரோனா கிடையாது’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.