ETV Bharat / state

நீலகிரியில் நிலச்சரிவை கட்டுப்படுத்துவது குறித்த தேசிய கருத்தரங்கு

author img

By

Published : Feb 28, 2020, 7:24 PM IST

நீலகிரி: மழைக்காலங்களில் நிலச்சரிவை கட்டுப்படுத்துவது குறித்த தேசிய கருத்தரங்கு இரண்டு நாட்கள் நடைபெற்றது.

நீலகிரி: மழைகாலங்களில் நிலச்சரிவை கட்டுபடுத்துவது குறித்த தேசிய கருத்தரங்கு இரண்டு நாட்கள் நடைப்பெற்றது.
நீலகிரி: மழைகாலங்களில் நிலச்சரிவை கட்டுபடுத்துவது குறித்த தேசிய கருத்தரங்கு இரண்டு நாட்கள் நடைப்பெற்றது.

கடந்த சில ஆண்டுகளாக நிலச்சரிவு காரணமாக இயற்கை வளங்கள் அழிதல், உயிரிழப்புகள் போன்றவை ஏற்பட்டுவருகின்றன. குறிப்பாக மலை பிரதேசங்களில் அதிகளவு மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில் மலை மாவட்டமான நீலகிரியில் கடந்த சில ஆண்டுகளாக நிலச்சரிவு அதிகமாகிவருகிறது. இதற்கு மழை ஒரு காரணமாக இருந்தாலும், சாய்வான பகுதிகளில் கட்டடங்கள் கட்டுவதாலும், தோட்டங்கள் போன்றவற்றை அழித்து வீடுகள் கட்டுவதாலும் நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

நீலகிரியில் நிலச்சரிவு கட்டுபடுத்துவது குறித்த தேசிய கருத்துரங்கு

இந்நிலையில் இதுபோன்ற நிலச்சரிவை கட்டுப்படுத்துவது குறித்த கருத்தரங்கு நிலகிரியில் இரண்டு நாள்கள் நடைபெற்றன. இந்த கருத்தரங்கில் இயற்கை வளங்களை அழித்தல், காலநிலை மாறுபாடுகள், மலை பகுதிகளில் அதிகரிக்கும் மக்கள் தொகை, முறையின்றி கட்டடங்களை கட்டுதல் போன்றவை மலை பகுதிகளில் அதிகளவு நிலச்சரிவு ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு சரிவான நிலங்களை மேலாண்மை செய்வதற்கு சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது என இந்த கருத்தரங்கில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ’நீலகிரியில் 183 இடங்கள் நிலச்சரிவில் பாதிக்கப்படும் இடமாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனை தடுக்க நவீன முறையில் சாலைகள் அமைக்கவும், இயற்கையை பாதுகாக்க மரங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் அவர் கூறுகையில் நகரங்களைவிட கிராமப்புற பகுதிகளில் அதிகளவு நிலச்சரிவு ஏற்படுவதாகவும், இதனைத் தடுக்க ஊரகப் பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு அதிகப்படுத்த வேண்டும் எனவும் கூறினார். இக்கருத்தரங்கில் முதன்மை செயலர் மற்றும் வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, விஞ்ஞானிகள் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்

இதையும் படிக்க:கோடைகாலத்தை வரவேற்கும் வகையில் பூத்துக் குலுங்கும் இலைபொரசு மலர்கள்

கடந்த சில ஆண்டுகளாக நிலச்சரிவு காரணமாக இயற்கை வளங்கள் அழிதல், உயிரிழப்புகள் போன்றவை ஏற்பட்டுவருகின்றன. குறிப்பாக மலை பிரதேசங்களில் அதிகளவு மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில் மலை மாவட்டமான நீலகிரியில் கடந்த சில ஆண்டுகளாக நிலச்சரிவு அதிகமாகிவருகிறது. இதற்கு மழை ஒரு காரணமாக இருந்தாலும், சாய்வான பகுதிகளில் கட்டடங்கள் கட்டுவதாலும், தோட்டங்கள் போன்றவற்றை அழித்து வீடுகள் கட்டுவதாலும் நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

நீலகிரியில் நிலச்சரிவு கட்டுபடுத்துவது குறித்த தேசிய கருத்துரங்கு

இந்நிலையில் இதுபோன்ற நிலச்சரிவை கட்டுப்படுத்துவது குறித்த கருத்தரங்கு நிலகிரியில் இரண்டு நாள்கள் நடைபெற்றன. இந்த கருத்தரங்கில் இயற்கை வளங்களை அழித்தல், காலநிலை மாறுபாடுகள், மலை பகுதிகளில் அதிகரிக்கும் மக்கள் தொகை, முறையின்றி கட்டடங்களை கட்டுதல் போன்றவை மலை பகுதிகளில் அதிகளவு நிலச்சரிவு ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு சரிவான நிலங்களை மேலாண்மை செய்வதற்கு சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது என இந்த கருத்தரங்கில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ’நீலகிரியில் 183 இடங்கள் நிலச்சரிவில் பாதிக்கப்படும் இடமாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனை தடுக்க நவீன முறையில் சாலைகள் அமைக்கவும், இயற்கையை பாதுகாக்க மரங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் அவர் கூறுகையில் நகரங்களைவிட கிராமப்புற பகுதிகளில் அதிகளவு நிலச்சரிவு ஏற்படுவதாகவும், இதனைத் தடுக்க ஊரகப் பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு அதிகப்படுத்த வேண்டும் எனவும் கூறினார். இக்கருத்தரங்கில் முதன்மை செயலர் மற்றும் வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, விஞ்ஞானிகள் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்

இதையும் படிக்க:கோடைகாலத்தை வரவேற்கும் வகையில் பூத்துக் குலுங்கும் இலைபொரசு மலர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.