ETV Bharat / state

குறைகளைக் கூற வெட்கப்படும் பழங்குடியினர் - ஆட்சியர் வேதனை

author img

By

Published : Jan 31, 2020, 9:47 AM IST

நீலகிரி: பழங்குடியின மக்கள் தங்களது குறைகளைக் கூற வெட்கப்படுகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வேதனை தெரிவித்தார்.

ooty collector press meet
ooty collector press meet

நீலகிரி மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பாக மனித நேய வார நிறைவு விழா நிகழ்ச்சி உதகையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கணேஷ், திராவிடமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, 'நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் தங்களது குறைகளை யாரிடம் கேட்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கூட இல்லாமல் இருப்பது வேதனை. அலுவலர்கள் அங்கு நேரில் சென்று கேட்டாலும் குறைகளைக் கூற வெட்கப்படுகின்றனர்.

பழங்குடியின மக்களின் இந்த நடவடிக்கையால் அரசுக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையே இடைவெளி அதிகரித்து வருகிறது. இந்தநிலை மாற வேண்டும் என்பதற்காக மக்களிடையே அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த குழுக்கள் அமைக்கபட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேச்சு

அதனை தொடர்ந்து கூடலூர் பகுதியைச் சேர்ந்த 87 பழங்குடியின மக்களுக்கு 2006 வன உரிமைச் சட்டத்தின் படி அங்கீகாரம் வழங்கபட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான கிராமமக்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: நாசாவுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவிக்கு உதவிக் கரம் நீட்டுமா அரசு!

நீலகிரி மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பாக மனித நேய வார நிறைவு விழா நிகழ்ச்சி உதகையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கணேஷ், திராவிடமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, 'நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் தங்களது குறைகளை யாரிடம் கேட்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கூட இல்லாமல் இருப்பது வேதனை. அலுவலர்கள் அங்கு நேரில் சென்று கேட்டாலும் குறைகளைக் கூற வெட்கப்படுகின்றனர்.

பழங்குடியின மக்களின் இந்த நடவடிக்கையால் அரசுக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையே இடைவெளி அதிகரித்து வருகிறது. இந்தநிலை மாற வேண்டும் என்பதற்காக மக்களிடையே அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த குழுக்கள் அமைக்கபட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேச்சு

அதனை தொடர்ந்து கூடலூர் பகுதியைச் சேர்ந்த 87 பழங்குடியின மக்களுக்கு 2006 வன உரிமைச் சட்டத்தின் படி அங்கீகாரம் வழங்கபட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான கிராமமக்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: நாசாவுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவிக்கு உதவிக் கரம் நீட்டுமா அரசு!

Intro:OotyBody:
உதகை 30-01-20
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குரும்பர், பனியர் மற்றும் காட்டு நாயக்கர் பழங்குடியின மக்கள் தங்களது குறைகளை யாரிடம் கேட்பது என்ற விழிப்புணர்வு இன்றி வாழ்ந்து வருவதுடன், தங்களது குறைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்க வெட்கபடுவது வருத்தமளிக்கிறது என மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசன்ட் திவ்யா வேதனை தெரிவித்தார்….
நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மனித நேய வார நிறைவு விழா நிகழ்ச்சி உதகையில் நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசன்ட் திவ்யா, சட்டமன்ற உறுப்பினர்கள் கணேஷ், திராவிடமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏராளமான ஆதிவாசி மக்கள் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசன்ட் திவ்யா: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் தங்களது குறைகளை யாரிடம் கேட்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கூட இல்லை என்றும், அதிகாரிகள் நேரில் சென்று கேட்டாலும் குறைகளை கூற வெட்கபடுகின்றனர் என்று கூறி வேதனை தெரிவித்தார்.
பழங்குடியின மக்களின் இந்த நடவடிக்கையால் அரசுக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையே இடைவெளி அதிகரித்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும் என்ற அவர் பழங்குடியின மக்களிடையே அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த குழுக்கள் அமைக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து கூடலூர் பகுதியை சார்ந்த 87 ஆதிவாசி மக்களுக்கு 2006 வன உரிமை சட்டத்தின் படி அங்கீகாரம் வழங்கபட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பழங்குடியின மணாவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. அப்போது குரும்பர் இன மாணவர்கள் ஆடிய பாரம்பரிய நடனம் அனைவரையும் வெகுhக கவர்ந்திருந்தது.


Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.