ETV Bharat / state

நீலகிரியில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும்- மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : Dec 11, 2019, 10:56 PM IST

நீலகிரி: உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Breaking News

நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளதாகவும், முதல் கட்டமாக 27ஆம் தேதி குன்னூர்,கோத்தகிரி ஒன்றியத்திற்கும், இரண்டாம் கட்டமாக 30ஆம் தேதி உதகை,கூடலூர் ஒன்றியத்திற்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா கூறினார்.

உதகையில் இன்று தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடையே பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டதோடு, கையேடும் வழங்கப்பட்டதாக கூறினார்.

மேலும், மாவட்டத்தில் 393 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 35 கிராம ஊராட்சி தலைவர்கள், 59 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஆறு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுவதாகவும் உள்ளாட்சி பணிக்காக 3,300 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், இவர்களுக்கான முதல் பயிற்சி 14ஆம் தேதியும், இரண்டாம் பயிற்சி 21ஆம் தேதியும், மூன்றாவது, இறுதி பயிற்சி 26, 29 ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் கூறினார்.

ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் நடத்தை விதி மீறல்களை கண்காணிக்க 24 மணி நேரம் இயங்கும் 12 பறக்கும் படைகள் ஏற்படுத்தப்படும் என்றும் கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் பிரசாரங்கள் மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் விளக்கினார்.

இதையும் படிங்க:

மீண்டும் தொடங்கிய மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் போக்குவரத்துச் சேவை!

நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளதாகவும், முதல் கட்டமாக 27ஆம் தேதி குன்னூர்,கோத்தகிரி ஒன்றியத்திற்கும், இரண்டாம் கட்டமாக 30ஆம் தேதி உதகை,கூடலூர் ஒன்றியத்திற்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா கூறினார்.

உதகையில் இன்று தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடையே பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டதோடு, கையேடும் வழங்கப்பட்டதாக கூறினார்.

மேலும், மாவட்டத்தில் 393 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 35 கிராம ஊராட்சி தலைவர்கள், 59 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஆறு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுவதாகவும் உள்ளாட்சி பணிக்காக 3,300 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், இவர்களுக்கான முதல் பயிற்சி 14ஆம் தேதியும், இரண்டாம் பயிற்சி 21ஆம் தேதியும், மூன்றாவது, இறுதி பயிற்சி 26, 29 ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் கூறினார்.

ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் நடத்தை விதி மீறல்களை கண்காணிக்க 24 மணி நேரம் இயங்கும் 12 பறக்கும் படைகள் ஏற்படுத்தப்படும் என்றும் கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் பிரசாரங்கள் மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் விளக்கினார்.

இதையும் படிங்க:

மீண்டும் தொடங்கிய மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் போக்குவரத்துச் சேவை!

Intro:OotyBody:உதகை 11-12-19

நீலகிரி மாவட்டத்தில் வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளதாகவும், முதல் கட்டமாக 27 ந் தேதி குன்னூர் , கோத்தகிரி ஒன்றியத்திற்கும், இரண்டாம் கட்டமாக 30 ந் தேதி  உதகை மற்றும் , கூடலூர் ஒன்றியத்திற்கும்  தேர்தல் நடத்தப்படவுள்ள தாக  மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா கூறினார்.

உதகையில் இன்று தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனை  கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடையே  பேசிய அவர்,  தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டதோடு  கையேடும் வழங்கப்பட்டதாக கூறினார்.
மாவட்டத்தில் 393 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 35 கிராம ஊராட்சி தலைவர்கள்  59 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 6  மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு  தேர்தல் நடத்தப்படுவதாக கூறினார்.
ஊரக  உள்ளாட்சி  பணிக்காக 3300 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், இவர்களுக்கான  முதல் பயிற்சி வகும் 14ந் தேதியும், இரண்டாம் பயிற்சி 21ந் தேதியும், மூன்றாவது மற்றும் இறுதி பயிற்சி 26 மற்றும் 29 ந் தேதிகளில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் நடத்தை விதி மீறல்களை  கண்காணிக்க 24 மணி நேரம் இயங்கும் 12 பறக்கும் படைகள்  ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். 

மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கான சுவர், கோவில்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளக்கூடாது என மேலும் கட்சியினர் தவிர்க்க வேண்டிய செயல்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா விளக்கினார்.

பேட்டி: இன்னசென்ட் திவ்யா நீலகிரி மாவட்ட ஆட்சியர்Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.