ETV Bharat / state

"வெளவால்களால் நிபா வைரஸ் பரவும்" அச்சத்தில் பொதுமக்கள்! - வவ்வால்கள்

நீலகிரி: சமவெளிப் பகுதியில் இருந்து மலைப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ள வெளவால்கள் கூட்டத்தால் நிபா வைரஸ் பரவும் என மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

spreading disease
author img

By

Published : Aug 25, 2019, 6:47 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியில் வனவிலங்குகள், பறவைகள் பெருமளவில் வாழ்ந்துவருகின்றன. தற்போது பெய்த கனமழையின் காரணமாக விலங்குகளும், பறவைகளும் இடம்பெயர்ந்துள்ளன. இதனால் உணவு, தண்ணீரைத் தேடி இவை குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்கின்றன.

இந்நிலையில், சமவெளிப் பகுதியில் இருக்கும் பறவைகள் பொதுவாக நீலகிரியின் தட்பவெப்ப நிலையினால் இங்கு வருவதில்லை. ஆனால் தற்போது முதல் முறையாக குன்னூர் பகுதிக்கு வெளவால்கள் கூட்டம் படை எடுத்துள்ளன. இந்த வெளவால்கள் குறிப்பாக வெலிங்டன் பகுதியில் உள்ள மரங்களில் கூட்டமாக இருக்கின்றன.

Nipah virus spread by bats coonoor
வவ்வால்கள் கூட்டம்

இதேபோல், கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் வௌவால்களால் நிபா வைரஸ் பரவிய நிலையில் தற்போது இவ்வகை பறவைகள் வருகை புரிந்து உள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிபா வைரஸ் பரவும் அபாயம்

மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பகுதியில் ராணுவ வீரர்கள், தேசிய விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதால் இவர்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியில் வனவிலங்குகள், பறவைகள் பெருமளவில் வாழ்ந்துவருகின்றன. தற்போது பெய்த கனமழையின் காரணமாக விலங்குகளும், பறவைகளும் இடம்பெயர்ந்துள்ளன. இதனால் உணவு, தண்ணீரைத் தேடி இவை குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்கின்றன.

இந்நிலையில், சமவெளிப் பகுதியில் இருக்கும் பறவைகள் பொதுவாக நீலகிரியின் தட்பவெப்ப நிலையினால் இங்கு வருவதில்லை. ஆனால் தற்போது முதல் முறையாக குன்னூர் பகுதிக்கு வெளவால்கள் கூட்டம் படை எடுத்துள்ளன. இந்த வெளவால்கள் குறிப்பாக வெலிங்டன் பகுதியில் உள்ள மரங்களில் கூட்டமாக இருக்கின்றன.

Nipah virus spread by bats coonoor
வவ்வால்கள் கூட்டம்

இதேபோல், கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் வௌவால்களால் நிபா வைரஸ் பரவிய நிலையில் தற்போது இவ்வகை பறவைகள் வருகை புரிந்து உள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிபா வைரஸ் பரவும் அபாயம்

மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பகுதியில் ராணுவ வீரர்கள், தேசிய விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதால் இவர்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Intro:சமவெளிப் பகுதியில் இருந்து மலைப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ள வவ்வால்கள் கூட்டம் நிபா வைரஸ் பரவும் என பொதுமக்கள் அச்சம்



Body:நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதி வனங்கள் சூழ்ந்த பகுதியாகும் எங்கு வனவிலங்குகளும் பறவைகளும் பெருமளவில் வாழ்ந்து வருகின்றன தற்போது கனமழை காரணமாக இடம்பெயர்ந்து வரும் விலங்குகளும் பறவைகளும் உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிக்கு படையெடுத்து வருகின்றன சமவெளிப் பகுதியில் இருக்கும் பறவைகள் பொதுவாக நீலகிரியின் தட்பவெட்ப நிலைக்கு வருவதில்லை ஆனால் தற்போது முதல் முறையாக நீலகிரி குன்னூர் பகுதிக்கு வவ்வால்கள் கூட்டம் படை எடுத்து உள்ளன குறிப்பாக வெலிங்டன் பகுதியில் மரங்களில் கூட்டமாக வாழ்ந்துவரும் வவ்வால்கள் இரவு நேரங்களில் இங்குள்ள பேரி பிளம்ஸ் கொய்யா போன்ற பழங்களை உட்கொண்டு வாழ்ந்து வருகிறது கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் வவ்வால்கள் நிபா வைரஸ் பரவிய நிலையில் தற்போது இவ்வகை பறவைகள் வருகை புரிந்து உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இப்பகுதியில் இராணுவவீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும் இடமாக இருப்பதால் இவர்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது என விளையாட்டு வீரர்களும் தெரிவித்து வருகின்றனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.