ETV Bharat / state

காட்டு யானை தாக்கியதில் நகராட்சி ஊழியர் உயிரிழப்பு - nilgiris district news

நீலகிரி: கூடலூரில் காட்டு யானை தாக்கியதில் நகராட்சி ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காட்டு யானை தாக்கியதில் நகராட்சி ஊழியர் உயிரிழப்பு
காட்டு யானை தாக்கியதில் நகராட்சி ஊழியர் உயிரிழப்பு
author img

By

Published : Nov 3, 2020, 1:14 PM IST

நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள ஓவேலி குயின்ட் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி. இவர் நகராட்சியில் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஆறு மாதமாக சாலை சீரமைக்கப்படாததால் பேருந்து வசதி நிறுத்தப்பட்டது. இதனால் இவர் தனது கிராமத்திலிருந்து நகராட்சி அலுவலகத்திற்கு நடந்து சென்று வந்தார்.

நேற்று (நவ.2) இரவு நகராட்சியில் பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய பாலுசாமியை காட்டு யானை வழிமறித்து மிதித்துக் கொன்றது. இதனிடையே இன்று (நவ.3) காலை அவரின் சடலத்தை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, இதேபோல் அதிகாலையில் தனது மகள் வீட்டிற்குச் சென்ற பெண்ணை காட்டு யானை கொன்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது சாலையை சீரமைத்து, காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்ட பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: யானை தாக்கி இருவர் உயிரிழப்பு: உடலுடன் உறவினர்கள் சாலை மறியல்

நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள ஓவேலி குயின்ட் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி. இவர் நகராட்சியில் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஆறு மாதமாக சாலை சீரமைக்கப்படாததால் பேருந்து வசதி நிறுத்தப்பட்டது. இதனால் இவர் தனது கிராமத்திலிருந்து நகராட்சி அலுவலகத்திற்கு நடந்து சென்று வந்தார்.

நேற்று (நவ.2) இரவு நகராட்சியில் பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய பாலுசாமியை காட்டு யானை வழிமறித்து மிதித்துக் கொன்றது. இதனிடையே இன்று (நவ.3) காலை அவரின் சடலத்தை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, இதேபோல் அதிகாலையில் தனது மகள் வீட்டிற்குச் சென்ற பெண்ணை காட்டு யானை கொன்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது சாலையை சீரமைத்து, காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்ட பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: யானை தாக்கி இருவர் உயிரிழப்பு: உடலுடன் உறவினர்கள் சாலை மறியல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.